முத்திரைகள் பயிற்சி செய்யும் வழிமுறைகள்! முத்திரை பயிற்சி இப்படி செய்தால் நன்மை கொடுக்கும்!
உட்காரும் முறை: முத்திரை பயிற்சி செய்வதற்கு முன்பு முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நேராக உட்கார வேண்டும். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் (Chair) உட்காரலாம். கால்களை மடிக்க முடியாதவர்கள் கால்களைத் தொங்கவிடாமல் விரிப்பின் மீது பாதங்களை வைத்து அமர வேண்டும்.
மூச்சுப் பயிற்சி (நாடி சுத்தி): மூச்சு சீராக ஓடுகிறதா என்று கவனித்து, மெதுவாக மூச்சுவிட்டு அமைதிக்கு வர வேண்டும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் நாடி சுத்தி (இடது பக்கம் மட்டும் மூச்சு எடுத்து விடுவது, வலது பக்கம் மட்டும் எடுப்பது, அல்லது மாறி மாறிச் செய்வது) செய்யலாம். இது சுவாச நிலையைச் சீரான அமைப்புக்குக் கொண்டுவரும்.
உணவு மற்றும் நீர் அருந்துதல்: வயிறு ஃபுல்லாக உணவு சாப்பிட்டிருந்தால், குறைஞ்சது அரை மணி நேரம் இடைவெளிவிட்டு முத்திரை பயிற்சி செய்வது ரொம்பச் சிறப்பு. பயிற்சி செய்யும் இடையில் தண்ணீர் குடிப்பதில் தவறு இல்லை. ஆனால், டீ அல்லது காபி குடித்துவிட்டு உடனே முத்திரை பிடிக்கக் கூடாது.
உறங்கும் மற்றும் எழும் போது: உறங்குவதற்கு முன்பு முத்திரை பிடித்துக்கொண்டே அப்படியே தூங்கிவிட்டாலும் தவறு கிடையாது; கைகள் இயற்கையாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடும். விழித்தெழுந்த உடனும் முத்திரை பயிற்சி செய்யலாம்.
குளிக்கும் முறை: குளித்துவிட்டு முத்திரை பயிற்சி செய்யும்போது, உறக்கத்தினால் ஏற்பட்ட உடல் சூடு நீங்கி அமைதி நிலை கிடைக்கும். குளிக்காமல் கை, கால், முகம் கழுவிட்டுச் செய்தாலும் அது தகுந்தவாறு வேலை செய்யும். மலஜாலம் கழித்துவிட்டுச் செய்தால் முத்திரை இன்னும் அற்புதமாக வேலை செய்யும்.
கெட்ட பழக்கங்களை விட: படுக்கையில் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது நோய் தன்மை உள்ளவர்கள் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் இடைவெளி என்ற விதிப்படி மற்ற நேரங்களில் பயிற்சி செய்யலாம். கெட்ட பழக்கங்கள் (மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்றது) உள்ளவர்களும் முத்திரையைத் தொடர்ந்து பிடித்துவரலாம்; இது அந்தப் பழக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட உதவி செய்யும்.
கால அளவு: டெய்லி 20 நிமிஷம் வீதம் குறைந்தது 100 நாள் முதல் 150 நாள் வரை முத்திரைகளைத் தொடர்ந்து பிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் செய்வது பலனளிக்காது.
செய்யும் இடங்கள்: இறை வழிபாடு செய்யும் போதும், காலையில் பூஜை செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், புத்தகம் படிக்கும் போதும், வேலை செய்யும் போதும், ஏன் வாக்கிங் (Walking) போகும் போது கூட முத்திரைகளைப் பிடித்துக்கொண்டே செய்யலாம்.
ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்: முத்திரை வைத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ள விரும்புவோர், சேனல் வீடியோக்களின் கீழ் உள்ள டிஸ்கிரிப்ஷனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைத் தொடர்பு கொண்டு, அதற்கான கட்டண விவரங்களை அறிந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ கற்றுக்கொள்ளலாம்.
கை விரல்களும் கோள்களும்: முத்திரை பிடிக்கும் போது நமது கைகளில் உள்ள கோள்களின் தன்மையால் சக்தி நிலைப்பாடு அதிகரிக்கிறது. கைகளுக்குள்ளேயே 9 விதமான கோள்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
உள்ளங்கையில் கோள்களின் அமைவிடங்கள்:
சுக்கிர மேடு: கட்டைவிரலின் அடிப்பகுதி.
சந்திர மேடு: உள்ளங்கையின் ஓரமாக உள்ள பகுதி.
செவ்வாய் மேடு: பள்ளமான பகுதியிலிருந்து மேடு வரை உள் செவ்வாய், நடு செவ்வாய், வெளி செவ்வாய் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. 4.குரு மேடு: ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள சிறிய மேடு.
சனி மேடு: நடுவிரலுக்குக் கீழே உள்ள பகுதி.
சூரிய மேடு: மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
புத மேடு: சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
கோள்களின் இயக்கம்: கேலக்ஸியில் உள்ள பல கோள்களில் 2 கோள்கள் நில கிரகங்களாக வைக்கப்பட்டு, ஏழு இயங்கக்கூடிய கோள்கள் மூலம் உடல் இயக்கம் மற்றும் ஏழு ஆதாரங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்து முன்னோர்கள் உள்ளங்கையில் நிரூபித்துள்ளனர்.
உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் கோள்கள்! விரல்களில் அடங்கிய பிரபஞ்ச ரகசியம்! Mudra Secrets
உள்ளங்கைகளுக்குள் அடங்கியிருக்கும் இரகசியத்தில் பல விசயங்களை நம் முன்னோர்கள் வெளிப்படித்தினார்கள். அப்படி நமது கைளுக்குள்ளேயும் விரல்களிலும் விளையாடும் 7 ஆதாரங்களுக்கான 7 கோள்கள் பற்றிய இருப்பிடத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னோர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.
கடும் தவம் செய்து தன்னை உணர்ந்து பிரபஞ்ச இரகசியத்தில் தன்னுள் இயங்கும் பிரபஞ்ச இரகசியத்தை உடலுக்குள் கண்டுணர்ந்து வெளிப்படித்தினார்கள். அப்படி நமக்காக அவர்கள் கொடுத்து சென்ற சக்தி வாய்ந்த விசயங்கள் நிறைய நிறைய வழிந்து ஓடும் உணர்வு உடைய உடம்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று சித்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் இன்னும் நமக்குத் கேள்விப்படாத பல அற்புதமான தெய்வீக வடிவங்கள் நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் ஆன்மீகம்.
அப்படிப்பட்ட ஆன்மீக வெளிப்பாட்டில் நமது உள்ளங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்) சனி இவைகளை சக்திகளை நமது உள்ளங்கை மூலம் கிரககிக்க முடியும். அந்த அற்புதமான சக்தியை இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி! url : https://youtu.be/E-cfnuBFPoM
முத்திரைகள் மூலம் இந்த கோள்களின் சக்தியை உணர்ந்து உடல், மனம், ஆன்மீக நலனை பெறலாம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி — இவை அனைத்தும் நமது கைவிரல்களில் மறைந்துள்ள சக்தி மையங்கள். சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் கண்டுபிடித்த இந்த ரகசியம் இன்றும் உயிருடன் நமக்குள் செயல்படுகிறது.
இந்த வீடியோவில் முத்திரைகளின் மூலம் கோள்களின் சக்தி எப்படி இணைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆன்மீக வெளிப்பாடு தொடங்கட்டும்!
Within our palms lies a great secret that our ancestors revealed through deep wisdom. In this video, we will learn about the seven planets connected to the seven chakras that operate through our hands and fingers.
Our ancestors were beings of immense knowledge. Through intense meditation and self-realization, they discovered the divine secrets of the universe within their own bodies and shared them with us.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp) 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
சக்கரங்களின் வகைகள்: கழுத்திலிருந்து ஆசனவாய் வரை உள்ள ஐந்து சக்கரங்கள் புற வாழ்க்கைக்குத் தேவையான பிரதான சக்கரங்களாகும். தலைக்கு மேலே உள்ள அக்யா மற்றும் சஹஸ்ராரா ஆகிய இரண்டு சக்கரங்களும் ஞான மார்க்கத்திற்கானது.
விரல்களும் சக்கரங்களும்: நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் கீழ்க்கண்டவாறு ஐந்து முக்கிய சக்கரங்களைக் குறிப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்:
கட்டை விரல்: மணிப்பூரக சக்கரம்
ஆள்காட்டி விரல்: அனாகத சக்கரம்
நடுவிரல்: விசுத்தி சக்கரம்
மோதிர விரல்: மூலாதார சக்கரம்
சுண்டு விரல்: சுவாதிஷ்டான சக்கரம்
முத்திரையின் பயன்: விரல்களில் இந்த சக்தி நிலைப்பாடு இயங்குவதனால்தான், நாம் முத்திரை பிடிக்கும் போது அந்த சக்கரங்களில் ஆற்றல் அதிகரித்து தியானத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.
ஆதார சக்கரங்கள் நமது கைவிரல்களில் முத்திரைகளினால் வெளிப்படும் ரகசியம்! The Hidden Cosmic Connection in Our Fingers!
கட்டை விரல் மணிப்பூரகம், ஆள்காட்டி விரல் அணாகதம், நடுவிரல் விசுக்தி, மோதிரவிரல் மூலாதாரம், சுண்டுவிரல் சுவாஸ்டிதானம் இந்த சக்கரகங்களின் அமைப்பு நமது விரல்களில் உள்ளதை நம் முன்னோர்கள் கண்டுணர்ந்து முத்திரைகள் மூலம் அதனை இணைத்து நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைவை வெளிப்படித்தி அதன் மூலம் நன்மை பெறும் இரகசியத்தை வெளிப்படித்தினார்கள். அதனை நாம் இங்கு கற்று பலன் பெற இறைவன் அருள்புரியட்டும்.
ஆதார சக்கரங்கள் என்பது நம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை இணைக்கும் ஆற்றல் மையங்கள். இந்த சக்கரங்களின் பிரதிபலிப்பு நம் கைவிரல்களில் இருப்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
#5 விரல்கள் – 5 சக்கரங்கள்! முத்திரைகளால் விழிக்கும் பிரபஞ்ச சக்தி! #உங்கள் கைகளில் மறைந்திருக்கும் சக்கர ரகசியம்! முத்திரைகள் மூலம் ஆன்ம நலம் பெறும் அதிசயம்! #கைவிரல்கள் = சக்கரங்கள்! முத்திரையின் மறைநிலை சக்தி வெளிப்படும்! #ஆதார சக்கரங்கள் – நம் கைவிரல்களில் மறைந்திருக்கும் ஆன்மிக இணைவு! #5 Fingers, 5 Chakras | முத்திரை ரகசியம் வெளிச்சம்!
If you are interested in the Muthirai Maruthuvam Online Course or wish to receive Muthirai Maruthuvam treatment for your health-related needs, please contact us
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
அஞ்சலி முத்திரை (ஆத்மாஞ்சலி முத்திரை) பற்றிய முக்கிய குறிப்புகள்:
செய்முறை மற்றும் பலன்: ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது இதைச் செய்ய வேண்டும். குறிப்பாக, இரவில் படுக்கும்போது குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் இதைச் செய்துவிட்டு உறங்கினால், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.
ஆத்ம அஞ்சலி முத்திரை என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான முத்திரைகளில் ஒன்றாகும்.
அஞ்சலி முத்திரை விளக்கம்: நாம் கைகளைக் கூப்பி வணங்கும் முறைக்கு ‘அஞ்சலி முத்திரை’ அல்லது ‘ஆத்மாஞ்சலி முத்திரை’ என்று பெயர். இதை நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்குவது மிகவும் சிறப்பான செயலாகும்.
நன்றி உணர்வு மற்றும் பலன்கள்: இந்த முத்திரையைச் செய்யும்போது, நாம் யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டிருந்தால் அந்த நன்றி அவர்களுக்குப் போய் சேரும்; மேலும், அதனால் கிடைக்கும் நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
மன அமைதி மற்றும் ஆற்றல்: மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு, ஈதர் (Ether) சக்தியை அதிகமாக ஈர்த்து வழங்கக்கூடிய மகா சக்தி வாய்ந்த முத்திரையாக இது விளங்குகிறது.
ஆஞ்சநேயரின் வழிபாடு: ஆத்மாவுக்கே அஞ்சலி செலுத்தக்கூடிய தன்மைக் கொண்டதால், ஆஞ்சநேயர் எப்போதும் இந்த ஆத்மாஞ்சலி முத்திரையிலேயே நிற்பார். ஆத்மாவை எப்போதுமே மதிப்புடன் பார்த்துக் கொள்ளும் இந்த முத்திரை வடிவத்தை பல கோவில் விக்கிரகங்களிலும் பார்க்க முடியும்.
தமிழர்களின் பண்பாடு: தமிழர்கள் அதனால்தான் வணக்கம் வைக்கும் முறையைக் கொண்டு வந்தனர்.
முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள் url : https://youtu.be/GX8wc2hmMpc
உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms! url : https://youtu.be/evprBM_91Zw
இது மன அமைதி, தெய்வீக சக்தி மற்றும் தன்னறிவு பெற உதவுகிறது. இந்த முத்திரையை தவறாமல் தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் உடல், மனம், ஆன்மா ஒருமைப்படும்.
இந்த வீடியோவில் ஆத்ம அஞ்சலி முத்திரையின் பொருள், செய்முறை, மற்றும் ஆன்மிக நன்மைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
#முக்கிய பலன்கள்: மனஅமைதி மற்றும் தியான திறன் அதிகரிப்பு நம்பிக்கை, அன்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி உடல் மற்றும் மனநலம் மேம்பாடு ஆன்மிக இணைப்பு வலுவாகும்.
#தினமும் 5 நிமிடங்கள் செய்து பாருங்கள் – உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் சக்தி பெருகும்!
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
முத்திரை என்ற ஒரு மகத்துவமான விஷயத்தை நாம செய்வதன் மூலமாக நம் தேகத்தில் ஆரோக்கிய தன்மையும், பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை உள்வாங்கி நம் வாழ்வை நல்முனைப்படுத்தக்கூடிய அதிசயம் நடக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த முறையைச் சித்தர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த சித்தர்களின் வழியில வந்ததுதான் முத்திரை பயிற்சி என்பது. இந்த முத்திரையை வைத்தியத்திற்கு முத்திரை வைத்தியம் என்றும், வழிபாட்டிற்கு முத்திரை வழிபாடு என்றும் சொல்கிறார்கள்.
அதை முன்னோர்கள் என்ன பண்ணாங்க அப்படின்னா, கோவில் விக்கிரகங்களில் இருந்து எல்லாவற்றிலும் முத்திரைகளைத் தெரிந்து கொள்ளும்படி செதுக்கி வைத்தார்கள். நமது விரல்களில் இருக்கக்கூடிய பஞ்சபூத சக்திகளும், நம்முடைய ஆதார சக்கரங்களும், நம் விரல்களில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும், கையில் இருக்கக்கூடிய கோள்களின் தன்மைகளும் இதெல்லாமே நமக்குத் தெரியத் தெரிய, அதனை நாம் முறையாக எடுத்துக்கொண்டு போகும்போது, பயிற்சி மூலமாக எடுத்துக்கொண்டு போகும்போது என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்.
நம் முத்திரையை நம்ம வீட்டிலேயே இருந்து, எந்த இடத்தில் நமக்கு வாய்ப்பளிக்கிறதோ அந்த இடத்திலிருந்து நாம் பிடித்து அமருகின்ற பொழுது என்ன நடக்கும் அப்படின்னா, அந்த சக்தி நிலைப்பாடு அதிகமாக நமக்குள்ள வேலை செய்து நம்மை ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு போகும். அதற்கான ஒரு வெளிப்பாடுதான் இந்த முத்திரை. சேனலில் உங்களுக்குத் தேவையான முத்திரை பயிற்சியைக் கொடுப்பதற்கான விஷயத்தை முழுக்கச் சொல்லிட்டு வரேன்.
நீங்கள் இந்த சேனலை மட்டுமே பார்த்துக் அப்படியே பயிற்சி பண்ணாலும் பண்ணிக்கலாம்; சரிங்களா. இதோட சேர்ந்து இந்தப் பயிற்சியை இன்னும் தெளிவா ஆன்லைன் மூலமாக, வகுப்புகள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாலும், தொடர்ந்து வந்து என்னிடம் கத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் கத்துக்கொள்ளலாம்; சரிங்களா. அதற்கு வாட்ஸ்அப் (WhatsApp) நம்பர் டிஸ்கிரிப்ஷனில் போட்டிருப்பேன். நீங்கள் அதை எடுத்து அதன் மூலமாகத் தொடர்பு கொண்டு, அதற்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு, கட்டணத்தைத் தெரிந்து கத்துக்க முடியும்.
இந்த முத்திரைக்காகத் தனியாகக் கொண்டு வரதுக்குக் காரணமே என்ன அப்படின்னா, முழுக்க முழுக்க முத்திரையை மனிதன் உணர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான். பயிற்சி செய்யச் செய்ய முத்திரையோட அதிசயத்தை நீங்கள் சூப்பரா புரிஞ்சிக்க முடியும். தொடர்ந்து பாருங்க; நான் முத்திரை எப்படி வேலை செய்யும், அந்த முத்திரை வேலை செய்வதற்கான காரணம் என்ன, உடல் எப்படி வேலை செய்கிறது, இதைச் செய்வதன் மூலமாக எந்த அளவுக்கு நோய் தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதையும் கூறுவேன்; சரிங்களா. பயன்படுத்திப் பாருங்க. எந்தச் சூழ்நிலை இருந்தாலும் முத்திரை பிடிக்கும் போது எந்த விதமான பக்க விளைவும் கிடையாது.
ஆனால், முத்திரைகளிலும் கூட நாம் எந்த முத்திரை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று ஒரு கால அளவு இருக்கிறது. அப்படி ஏன் இந்தக் காலத்தில் செய்ய வேண்டும், ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, தானாவே உங்களுக்குக் கண்டிப்பாகப் புரிதல் வரும்.
முன்னோர்கள் ஆராய்ச்சி பண்ண விஷயத்தைப் படித்த ஏடுகளில் இருந்தும், எனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களிடமும் நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. சரிங்களா? அதற்கு எல்லா குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நண்பன் ராஜேஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் படித்த புத்தகங்கள், குருமார்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து சேனலை ஃபாலோ பண்ணுங்க. வீடியோ பிடிச்சா லைக் பண்ணுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க, சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
குருவே நம, தந்தையே நம. நாம இன்னொரு பதிவுல சந்திப்போம்.
🌿 முத்திரை மருத்துவம் – Muththirai Maruthuvam In this video, we explore the sacred science of Pancha Bhootha (Five Elements) and the Chakra System through ancient Mudras. Learn how these powerful Muthirai techniques can activate your energy centers (chakras), balance the five elements – Earth, Water, Fire, Air, and Space – and bring physical, mental, and spiritual harmony.
1. விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள் url : https://youtu.be/UIQ66h9ChV0 2. ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras url : https://youtu.be/KoRfHEHI5h8 3. ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி! url : https://youtu.be/E-cfnuBFPoM 4.உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms! url : https://youtu.be/evprBM_91Zw
#பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள் இந்த வீடியோவில், உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கும் முத்திரைகள், யோக ரகசியங்கள் மற்றும் தியான வழிமுறைகள் எளிமையாக விளக்கப்படுகின்றன.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com 🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp! 👍 Please Like, Share, and Subscribe for more updates!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer: Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
🧘 சராகலை தியானம் (சுவாசகலை) – ஆன்லைன் பயிற்சி 🙏 சரகலையை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு சிறிய தவறினால், இன்னும் ஏழு நாட்களில் மரணம் நிகழும் என்று தெரிந்தும் கலங்காத ஒரு மாமன்னனின் கதை இது.
🌟 சாபத்தை வரமாக மாற்றிய மனப்பக்குவம்
ஒரு முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டதன் விளைவாக, தட்சகன் என்ற நாகத்தின் கடியால் இறப்பாய் என்று மன்னன் பரிட்சித்து சாபம் பெற்றார். அந்தச் சாபத்தை கேட்டபோதும் அவர் பயப்படவில்லை.
தன் தவறை உணர்ந்த மன்னன், உடனே தன் ராஜ உடைகளை களைந்து, தன் மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டினார்.
மீதமுள்ள ஏழு நாட்களை இறைத் தியானத்தில் கழிக்க கங்கை நதிக்கரைக்கு சென்றார். அங்கு பல முனிவர்கள் நடுவே, வியாச முனிவரின் புதல்வரான சுக பிரம்ம ரிஷியை சந்தித்தார்.
📖 ஏழு நாள் ஞான வேள்வி
“இன்னும் சில நாட்களில் இறக்கப் போகும் மனிதன் செய்ய வேண்டிய மிக உயர்ந்த கடமை என்ன?” — இதுவே மன்னனின் கேள்வி.
அதற்குப் பதிலாக சுக முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஏழு நாட்கள் மன்னன் உணவும் உறக்கமும் இன்றி, தன் உடலின் மீதான பற்றை முழுமையாக விட்டு, ஆன்மீக ஞானத்தை அடைந்தார். மரணம் என்பது உடலுக்கே உரியது, ஆன்மாவிற்கு அல்ல என்ற பரம சத்தியத்தை உணர்ந்தார்.
ஏழாம் நாள், தட்சகன் ஒரு சிறிய புழுவாக மாறி, மன்னருக்குப் படைக்கப்பட்ட பழத்தின் உள்ளே மறைந்து வந்தான்.
தன் பயங்கர உருவத்தை எடுத்துக் கொண்டு மன்னனைத் தீண்ட வந்தபோதும், மன்னன் பயப்படவில்லை. அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி, தன் ஆன்மாவை ஏற்கனவே இறைவனுடன் ஒன்றிணைத்திருந்தார்.
தட்சகன் கடித்தபோது, மன்னரின் உடல் மட்டுமே சாம்பலானது. ஆனால் அதற்கு முன்பே, ஞானத்தின் மூலம் அவர் மோட்சம் அடைந்திருந்தார்.
மரணத்தை அஞ்சாமல், அதை ஆன்மீக உயர்விற்கான வழியாக மாற்றியவர் பரிட்சித்து. வாழ்க்கை எப்படித் தொடங்கியது என்பதைக் காட்டிலும், அது எப்படி முடிவடைந்தது என்பதே ஒருவரின் மகத்துவத்தை நிர்ணயிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகும்.
This is the story of a great king who did not lose his composure even after learning that he would die within seven days because of a small mistake he had made.
🌟 The Maturity That Turned a Curse into a Blessing
As a result of placing a dead snake around the neck of a sage, King Parikshit was cursed that he would die from the bite of a serpent named Takshaka. When he heard this curse, he did not panic.
Realizing his mistake, the king immediately removed his royal garments and crowned his son Janamejaya as the next ruler.
He then went to the banks of the River Ganga to spend his remaining seven days in divine contemplation. There, among many sages, he met Shuka Brahma Rishi, the son of Vyasa.
📖 The Seven-Day Sacrifice of Wisdom
“What is the highest duty of a man who is about to die in a few days?” — this was the king’s question.
In response, Sage Shuka expounded the Srimad Bhagavatam. For seven days, the king neither ate nor slept. He completely detached himself from his physical body and attained spiritual wisdom. He realized the ultimate truth — that death belongs only to the body, not to the soul.
On the seventh day, the serpent Takshaka transformed into a tiny worm and hid inside a fruit that was offered to the king.
When Takshaka revealed his terrifying form and came to bite him, the king did not fear. He was deeply absorbed in meditation, having already united his soul with the Divine.
When Takshaka bit him, only the king’s body was reduced to ashes. But even before that moment, through wisdom, he had already attained liberation (Moksha).
Parikshit was one who did not fear death but transformed it into a path for spiritual elevation. This event stands as proof that a person’s greatness is determined not by how life begins, but by how it ends.
மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன.
ஒன்று – கிழமை
இரண்டு – திதி
மூன்று – நல்சித்திரம் (நட்சத்திரம்)
நான்கு – யோகம்
ஐந்து – கரணம்
இவற்றில் கிழமை, திதி , நல்சித்திரம் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது தான். ஆனால் யோகமும் கரணமும் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தில் விவாதித்து அமைத்தனர்.
இதை நாம் முறையே வரிசைப்படி பார்ப்போம்/
1. கிழமை
கிழமை என்பது இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே முதல் தமிழ் சங்கத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய கிரகங்களை நம் முன்னோர்கள் அறிந்து அவற்றின் ஓட்டத்தை வைத்து 7 கிரகங்களையும் மற்ற விண்மீன்களைக் காட்டிலும் வேகமாக நகர்வதை அவதானித்து இந்த 7 கிரகங்களும் நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது என்பதனை முதல் தமிழ்ச் சங்கத்திலேயே விவாதித்து முடிவு செய்திருந்தார்கள்.
சூரியனை மையமாகக் கொண்டு 7 கிரகங்களும் சுற்றுகின்றன என நன்கறிந்து. நமது பூமியும் சூரியனைத் தான் சுற்றுகிறது என்பதனை புரிந்து கொண்டு, நமது கண்களுக்கு மாயையால் சூரியன் மேலெழவதாக தெரிந்தாலும், நமது பூமிக்கு பதிலாக சூரியனை ஒரு கிரகமாக வடித்தார்கள்.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள 7 கிரகங்களும் நடுவில் சூரியனும், சூரியனைச் சுற்றி முதல் வட்டப் பாதையில் புதனும், இரண்டாவதாக வெள்ளியும், மூன்றாவதாக பூமியும், பூமியைச் சுற்றி திங்களும், நான்காவதாக செவ்வாயும், ஐந்தாவது வியாழன் மற்றும் ஆறாவதாக சனி கோளும் இடையறாது சுற்றிக் கொண்டு இருப்பதாக முதலாம் தமிழ் சங்கத்தில் முடிவு செய்து இருந்தார்கள். அப்பொழது ராகுவையும் கேதுவையும் அறிய வேண்டிய தேவை இல்லாததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்படி ஏழு கிரகங்களையும் பாமர மக்களுக்கும் புரியவைக்கதான் கிழமையை உருவாக்கினார்கள்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புதனும், வெள்ளியும், திங்களும் ஆக மூன்று கோள்கள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே அதாவது மேற்கே (மேலே) செவ்வாய் வியாழன், சனி ஆகிய மூன்று கோள்கள் உள்ளது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள கோள்கள் பெண் கோள்களாகவும், அதாவது பெண்களின் குணங்களை கொண்ட கோள்களாகவும், பூமிக்கு வெளியே உள்ள கோள்களை ஆண்கள் குணங்களாகவும் சித்தரித்து ஒரு புத்தாண்டிலிருந்து முதல் நாளை ஞாயிறு என ஒளி மிகுந்த நாளில் ஆரம்பித்து, அடுத்து ஒரு பெண் கிரகம் திங்களாகவும் அடுத்து ஒரு ஆண் கிரகம் செவ்வாயாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் புதனாகவும் அடுத்து ஒரு ஆண் கோள் வியாழனாகவும், அடுத்து ஒரு பெண் கிரகம் வெள்ளியாகவும், அடுத்து ஒரு ஆண் கிரகம் சனி என வகைப் படுத்தி ஒரு வாரத்திற்கு 7 நாட்களாக அமைத்தார்கள்.
1.ஞாயிறு – நீர் வண்ணம்.
2.திங்கள் – நீலம்
3.செவ்வாய் – சிவப்பு
4.புதன் – மஞ்சள்
5.வியாழன் – வெள்ளை.
6. வெள்ளி – பச்சை.
7.சனி – கருப்பு.
என 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரிசைப் படுத்தியுள்ளார்கள்.
இந்த வாரம் எனும் 7 நாட்களுக்கும் நம் மூச்சுக் காற்று நம் உடலில் 6 சக்கரங்களைக் கடந்து 7வது சக்கரமான பிரபஞ்ச ஆற்றலில் இணைவதையும் சம்பந்தபடுத்தி வாரம் முதல் தமிழ்சங்கத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாளை 24 ஓரைகளாக்கி அதில் மூச்சுக் காற்று 7 சக்கரங்களை மூன்று முறை கடந்து அடுத்த நாள் காலை சூரிய உதயத்தில் எந்த சக்கரத்தில் மூச்சுக் காற்று இருக்குமோ அதை கிழமை ஆக்கி இருப்பதால் தான் இந்த வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை இந்த உலகில் உள்ள அனைவரும் ஏற்று இன்று வரை மாற்றாமல் உலகம் முழுவதும் அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் உலகம் முழுதும் வாழ்பவர்கள் குமரிக்கண்டம் நீருழியில் மூழ்கிய போது காவடியுடன் இலங்கை வரை நடந்து வந்து அங்கிருந்து நெய்தல் வழியாக புலம் பெயர்ந்த நம் உறவுகள் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் இதுதான்.
2. திதி
திதி என்பதும் 20,,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. திங்கள் நமது பூமியை 29.5 (30 திதி) நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. அதே போல் நிலா தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும் அதே 29.5 நாட்கள் அல்லது 30 திதிஆகிறது. இந்த காரணத்தால் பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை தான் நாம் பார்க்க முடியும் நிலவின் பின்பகுதியை நாம் பார்க்கவே முடியாது. அதனால் தான் நமது வழிவழியாக வரும் நிலா கதையில் கூட பாட்டி வடை சுடும் காட்சி எப்பொழுதும் தெரிந்து கொண்டு உள்ளது, வேறு வடிவங்களே தெரியாது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் பொழது அமாவாசையாகவும், நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும் பொழுது பெளர்ணமியாகவும் தெரிகிறது. நாம் பூமியிலிருந்து நிலவை பார்ப்பதால் தான் இந்த காட்சி. அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து வளர்பிறை, முதல் பிறை, இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை, நான்காம் பிறை இப்படி பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறையாகி 14 நாட்களுக்குப் பிறகு அமாவாசையாக மாறும். இதில் அமாவாசைக்கு பிறகு வளர்பிறை.
முதல் பிறை – பிரதமை, பாட்டிமை
இரண்டாம் பிறை = துவாதியை
மூன்றாம் பிறை – திரிதியை
நான்காம் பிறை – சதுர்த்தி
ஐந்தாம் பிறை – பஞ்சமி
ஆறாம் பிறை – சட்டி
ஏழாம் பிறை – சப்தமி
எட்டாம் பிறை – அட்டமி
ஒன்பதாம் பிறை – நவமி
பத்தாம் பிறை – தசமி
பதினொன்றாம் பிறை – ஏகாதசி
பன்னிரன்டாம் பிறை – துவாதசி
பதின்மூன்றாம் பிறை – திரியோதசி
பதினான்காம் பிறை – சதுர்தசி
அதற்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறை. அதேபோல் மீண்டும் 14 அதே திதிகள் அதற்கு அடுத்த நாள் அமாவாசை. இப்படி இரண்டு 14 திதிகளைக் கூட்டி 28 நாட்கள் ஆன பின் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை ஆக மொத்தம் 30 திதிகள். இதை ஒரு மாதமாக 12,,960 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துள்ளார்கள். ஆனால் நிலா, பூமியை சுற்ற 29.5 நாட்கள் தான். இதை சரி செய்ய சந்திர நாட்காட்டியில் முதல் மாதத்திற்கு 29 நாட்களும், இரண்டாம் மாதத்திற்கு 30 நாட்களும், மூன்றாம் மாதத்திற்கு 29 நாட்களாகவும் நான்காம் மாதம் 30 நாட்களாகவும் இப்படி 6 மாதங்கள் 29 நாட்களாகவும் 6 மாதங்கள் 30 நாட்களாகவும் ஆக மொத்தம் 12 மாதங்களுக்கு 354 நாட்கள். ஒரு வருடம் என்பதை 12 மாதங்களாக 354 நாட்கள் என வடிவமைத்துக் கொண்டார்கள். சந்திர நாட்காட்டியில் 12 அமாவாசையும் 12 பௌர்ணமிகளும் இருக்கும். நிலவின் ஒரு நாள் பயணத்தை 13 திகிரி நகர்வு ஒரு திதி என கொண்டார்கள். திதிகளின் காலம் ஒரே மாதிரி 24 மணி நேரம் என்று இருக்காது. ஒவ்வொரு திதியும் காலம் வேறுபடும். நிலவு கிழக்கு தொடுவானத்தில் உதிக்கும் நேரம் தான் திதி. இந்த திதி கணக்கில் தான் சூரியன் தன் 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றி வர 96,00,000 திதிகள் ஆகிறது என கணித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்) சூரியனின் ஒரு பாத நகர்வு எனில் சூரியன் ஒரு வட்டம் அதாவது 360 திகிரி நகர 108 பாதங்கள் கடக்க வேண்டும்.
108 X 247 = 26, 676 ஆண்டுகள் ஆகும் 108 பாதங்கள் கடக்க . தமிழ் எழுத்துக்களில் 247 என்ற எண்ணில் எழுத்துக்களை வடிக்க வேண்டும் எனில் சூரியனின் இரண்டு முழு சுற்றை பார்த்தால் தான் முடியும். எனில் இரண்டு தடவை சூரியன் சுற்ற ஆகும் காலம் 26, 676 x 2 = 53,352 ஆண்டுகள்.
53, 352 ஆண்டுகள் சூரியன் சுற்றை கவனித்தால் ஒழிய ஒரு பாதம் சூரியன் நகர்வதற்கு 247 ஆண்டுகள் ஆகும் என தமிழ் எழுத்துக்களில் அந்த எண்ணை வடிக்க முடியும். தமிழ் வார்த்தைகள் சித்திர எழுத்துக்கள் என குறைந்த பட்சம் 53 ஆயிரம் ஆண்டுகள் சூரிய நகர்வை நம் முன்னோர்கள் அவதானித்து இருப்பார்கள் என்பது தெரிகிறது.
தச நாடி மனித உடலில் உயிர்சக்தி (பிராணம்) ஓடும் நுண்ணிய பாதைகளே நாடிகள். யோக–சித்த நூல்களில் 72,000 நாடிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. அதில் மிக முக்கியமான பத்து நாடிகள் — தச நாடிகள். 🌸 தச நாடிகள் (பத்து நாடிகள்) 1️⃣ இடா நாடி 🌙 இடம்: இடது மூக்குத் துளை பணி: மன அமைதி, குளிர்ச்சி, உணர்ச்சி சமநிலை 2️⃣ பிங்கள நாடி இடம்: வலது மூக்குத் துளை பணி: செயல், உடல் வெப்பம், ஜீரண சக்தி 3️⃣ சுஷும்னா நாடி இடம்: முதுகுத் தண்டு நடுப்பாதை பணி: ஆன்ம விழிப்பு, குண்டலினி சக்தி இயக்கம் 4️⃣ காந்தாரி நாடி இடம்: இடது கண் பணி: பார்வை தெளிவு 5️⃣ ஹஸ்திஜிஹ்வா நாடி இடம்: வலது கண் பணி: கண் ஒளி, நரம்பு ஒழுங்கு 6️⃣ பூஷா நாடி இடம்: வலது காது பணி: கேள்விசக்தி 7️⃣ யசஸ்வினி நாடி இடம்: இடது காது பணி: ஒலி உணர்வு 8️⃣ அலம்புஷா நாடி இடம்: குதப்பகுதி பணி: கழிவு நீக்கம் 9️⃣ குஹு நாடி இடம்: பாலுறுப்பு பணி: இனப்பெருக்க சக்தி 🔟 சங்கினி நாடி இடம்: தொண்டை பணி: பேச்சு, சுவாச ஒழுங்கு ஆன்மீகக் குறிப்பு இடா மற்றும் பிங்கள நாடிகள் சமநிலையடைந்தால் ➡ சுஷும்னா நாடி திறக்கும் ➡ மன அமைதி, தெளிவு, ஆன்ம வளர்ச்சி கிடைக்கும்.