அகத்தியர்‌ ஞான சரநூல்‌ சு. எண்‌. 1879 – சரவித்தை – 10

உமையவளுக்குச்‌ சங்கரனார்‌ திருவுளம்‌ வைத்தியம்‌ செய்பவர்‌ போகும்‌ போது காயம்‌, படுகுறி சொல்வது. பிரதிவிக்கு முதுகு, அப்புவுக்குக்‌ கால்‌, அக்கினிக்கு மார்பி, வாய்வுக்குக்‌ கை, ஆகாயத்துக்குத்‌ தலை. இப்படி ஐந்து பூதமும்‌ நிற்பதை அறிந்து செல்லவும்‌. கெட்டவனுக்கு இன்னவிடத்தில்‌ காயம்‌ படுமென்றும்‌ கூறலாம்‌. இவற்றிற்கு மேல்‌ பிரதானம்‌ சந்திரனுக்கு இடப்புறம்‌ என்றும்‌, சூரியனுக்கு வலப்புறம்‌ என்றும்‌, ஆகாயத்துக்குப்‌ படுவான்‌ என்றும்‌ சொல்லலாம்‌.

யாரொருவன்‌ கெட்டவனெனக்‌ குறிப்பறிதல்‌
ஒருவன்‌ கெட்டவன்‌ என்றும்‌, நஞ்சுத்‌ தின்றான்‌ என்றும்‌, சொன்னபடி நடந்தால்‌ சூனியமாகில்‌ பலிக்கும்‌. பூரணமாகில்‌ பலிக்காது.

பஞ்ச பூதங்கள்‌ இயங்கும்‌ வகையறியும்‌ முறை
பிரதிவியோடும்‌ போது மூக்குத்‌ தண்டைத்‌ தட்டியோடும்‌, தேய்வு ஒடும்‌ போது மேல்‌ விழும்பைத்‌ தட்டியோடும்‌, வாய்வு ஒடும்‌ போது பக்கத்து விழும்பைத்‌ தட்டி ஓடும்‌. ஆகாசம்‌ ஓடும்‌ போது ஒன்றிலும்‌ தட்டாமல்‌ ஓடும்‌ என அறியலாம்‌.

பஞ்ச பூத நிறமறிதல்‌
பிரதிவி – பொன்‌ நிறம்‌. இதன்‌ கோணம்‌ நான்குச்‌ சதுரம்‌. நீளம்‌ 12 விரல்‌ கடையோடும்‌.
அப்புவு – வெண்மை நிறம்‌. பிறை போலிருக்கும்‌. துவர்ப்புண்டு. இதன்‌ நீளம்‌ 16 விரல்‌ கடையோடும்‌. அக்கினி – சிவப்பு நிறம்‌. முக்கோண வடிவம்‌. காரத்தன்மை உடையது. 8 விரல்‌ கடையோடும்‌. வாய்வு – நீல நிறம்‌. புளிப்புத்‌ தன்மையுடையது.
அறுகோண வடிவம்‌. 6 விரல்‌ கடையோடும்‌. ஆகாசம்‌ – புகை நிறம்‌. வட்ட வடிவம்‌. நாரதமில்லை. ஒரு விரல்‌ கடையோடும்‌. அப்படி ஐந்து பிரதானமும்‌ இயங்கும்‌ என
அறியவும்‌. இதில்‌ பிரதிவியின்‌ நிறம்‌ நல்லது. அக்கினி, வாய்வு ஆகாசமும்‌ தீதாகும்‌.

ஆண்‌, பெண்‌ கொண்ட பிணி தீருமோ?, தீராதோ?
என்று ஆண்‌ கொண்ட பிணிக்கு ஆண்‌ வந்து ஆண்களிடத்தில்‌ கேட்டால்‌ தீருமெனவும்‌, பெண்‌ கொண்ட பிணிக்குப்‌ பெண்‌ வந்து பெண்ணிடத்தில்‌ கேட்டால்‌ தீரும்‌ என்றும்‌, இவை
இயங்கும்‌, இயங்காத திசையில்‌ வந்து நின்றால்‌ நடந்தாலும்‌, கிடந்தாலும்‌ பெண்‌ கேட்டப்‌ பிணிக்கு ஆண்திசை இயங்குகின்ற திசையில்‌ பெண்‌ வந்து நின்றால்‌ சிறிது நாட்கள்‌
சென்று தீரும்‌ எனவும்‌, ஆரம்பத்தில்‌ பெண்‌ திசையில்‌ வந்த ஆணுக்கு முன்போல்‌ சொல்லவும்‌. இதுக்குப்‌ பெண்ணுக்குப்‌ பெண்ணிடத்திலும்‌, ஆணுக்கு ஆணிடத்திலும்‌ சுத்தாங்கமாகத்‌ தீரும்‌.

பிள்ளை நிறமறிதல்‌
ஐந்து பூதமும்‌ இயங்குவது அறிந்து பூபோகம்‌ செய்யும்‌ போது எந்தப்‌ பூதம்‌ இயங்குமோ, அந்தப்‌ பூதநிறமே கர்ப்ப காலத்தில்‌ விந்து தரிக்கும்‌. அந்தப்‌ பிள்ளைக்கு மந்த நிறம்‌
அந்தக்‌ குணமே உண்டாகுமென அறியவும்‌.

பிணி கொண்ட பேருக்குப்‌ பஞ்ச பூதம்‌
இயங்கும்‌ குறிப்பறிதல்‌ பிரதிவிக்கு நாள்‌ சென்று தீரும்‌. அப்புக்குச்‌ சீக்கீரமாகத்‌
தீரும்‌. தேயுவுக்கு மூன்று நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மூன்று நாட்களில்‌ மரணம்‌. வாய்வாகில்‌ இரண்டு நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மரணம்‌ ஆகாசமாகில்‌ ஏழு நாட்களில்‌ மரணம்‌. உபயமானால்‌ ஐந்து நாட்களில்‌ மரணம்‌. இது தப்பினால்‌
மரணமில்லை என்று கேட்ட பேருக்கு வந்தறிந்து சொல்லவும்‌.

கர்ப்ப சோதனை
கற்பம்‌ ஆணோ ?, பெண்ணோ ?- என்று கேட்டால்‌ கேட்பவருக்கு இயங்கும்‌ திசையாகில்‌ பிள்ளையில்லை எனலாம்‌. இதில்‌ சிதறி ஓடினால்‌ பிறந்தழியும்‌ எனலாம்‌. சந்திரன்‌ என்றால்‌ பெண்‌, சூரியன்‌ என்றால்‌ ஆண்‌ என்று சொல்லவும்‌. பிறந்த பிள்ளை பிழைக்குமா ? என்று கேட்டால்‌, பிள்ளைப்‌ பிறந்த செய்தி யாரொருவன்‌ வந்து கேட்கின்றானோ ? ஆண்‌, பெண்‌ பிறந்த செய்தியறிந்து ஆணுக்குச்‌ சூரியனும்‌, பெண்ணுக்குச்‌ சந்திரனும்‌ இயங்கும்‌ போது ஸ்ரீ போகம்‌ செய்யவேண்டும்‌. இதில்‌ ஆணுக்குச்‌ சூரியனோடினால்‌ ஆண்‌ என்றும்‌, சந்திரன்‌ ஓடினால்‌ பெண்‌ என்றும்‌ சொல்லவும்‌.

விசமறிதல்‌
_ விசமுண்டோ இல்லையோ ?என்றால்‌ சூரியனாகில்‌ விசம்‌ என்றும்‌, சந்திரனாகில்‌ விசம்‌ தீராது என்றும்‌, இயங்கும்‌ திசையில்‌ வந்து இயங்காத்‌ திசையில்‌ வந்து கேட்டால்‌ விசம்‌ கடினம்‌ என்றும்‌ அறிந்து கூறவும்‌.

சர இயக்கம்‌ அறிதல்‌
வெள்ளி, திங்கள்‌, புதன்‌ மூன்று நாட்களிலும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கு அமரபட்சம்‌, பூர்வபட்சம்‌ இரண்டிலும்‌ இயங்கும்‌ வகையறிதல்‌ அமரபட்சத்தில்‌ சூரியன்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்தில்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்காவிட்டால்‌ சரீரத்துக்குப்‌ பயமும்‌, வியாதியும்‌ உண்டாகும்‌. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்குச்‌ சந்திரனும்‌, திங்களுக்குச்‌ சூரியனும்‌ ஓடினால்‌ பயமுண்டாகும்‌. இதன்படி ஏழு வாரமும்‌ மாறி ஒடினால்‌ மரணமுண்டாகும்‌. இவ்வாறு இல்லாமல்‌ ஞாயிற்றுக்குச்‌ சூரியனும்‌, திங்களுக்குச்‌ சந்திரனும்‌ ஓடினால்‌ மிகவும்‌ நல்லது. இப்படி ஏழு நாட்களும்‌ தவறாமல்‌ ஓடினால்‌ ஆயுசுக்‌ கூடும்‌. நல்ல சிவயோகி சிவ ஞானியாக இருப்பான்‌ என்று அறியவும்‌.

சரம்‌ பார்த்து கிரிகை அறிதல்‌
சந்திரன்‌ வீடாக இருந்து போசனம்‌ செய்தால்‌ உணவானது துவத்தல்‌, காரத்தன்மையிலும்‌ இருக்கும்‌. சூரிய வீடாக இருந்தால்‌ உணவானது நெய்‌, பால்‌, புளி, கரிப்பு முதலானவற்றை விட்டு விடவும்‌. இப்படி சாப்பிடும்‌ முன்‌ முதலில்‌ தண்ணீர்‌ குடிக்காமல்‌ பாதி வயிற்றுக்குச்‌ சாதமும்‌, கால்‌ வயிற்றுக்குத்‌ தண்ணீரும்‌, கால்‌ வயிற்றுக்கு வாயுப்‌ பட்சணமும்‌ மாறியோடும்‌ போது இடக்கைக்‌ கீழும்‌ படுத்திருந்து சரீர சுத்தி செய்து கொண்டு ஒட்டியாணமும்‌ தரித்துக்கொண்டு சரம்‌ பார்த்தால்‌ சிதறாமல்‌ ஓடும்‌. இப்படி நான்கு வகைக்‌ காலமும்‌ சிதறாமல்‌ ஓடும்‌.

வயதை அறிதல்‌
ஒவ்வொரு கலையிலும்‌ ஐந்து நாழிகைச்‌ சரம்‌ இயங்கும்‌. இதில்‌ ஒரு நாழிகைக்‌ குறைந்தாலும்‌ இருபது வயது குறையும்‌. ச–6

இதுமட்டும்‌ அல்லாமல்‌ சரம்‌ உதிக்கும்‌ போது ஸ்ரீபோகம்‌ செய்தால்‌ அந்த வேளையில்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌. பிள்ளைக்கு வயது குறையாது என்று அறியவும்‌. கெடுதி வருமோ ? வராதோ? என்றால்‌ சந்திரன்‌ எனில்‌ வரும்‌. சூரியன்‌ எனில்‌ வராது. சந்திரனில்‌ இருந்து ஓடினால்‌ கொஞ்சம்‌ வந்து போகும்‌. அடைப்பட்டால்‌ வராது எனவும்‌ அறியலாம்‌.
பக்கம்‌ பதினைந்திற்கும்‌ காலம்‌ அறிதல்‌ அமரபட்சம்‌ சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதமை முதல்‌ பதினைந்து நாளும்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌.

பூர்வபட்சம்‌
சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதிமை முதல்‌ காலம்‌ பதினைந்து நாட்களும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்கினால்‌ வியாதியும்‌, கேடும்‌ விளையும்‌. மழை நாளிலும்‌
அகப்படுவர்‌ எனவும்‌ அறியலாம்‌.

பஞ்சபூதம்‌ சந்திரன்‌ சூரியனில்‌ இயங்கும்‌ வகையறிதல்‌
பிரதிவிக்கு 1 1/, நாழிகை (நிமிடம்‌)
அப்புவுக்கு 1 1/, நாழிகை மிடம்‌)
தேய்வுக்கு 1 நாழிகை இமிடம்‌)
வாய்வுக்கு 1 5/, நாழிகை மிடம்‌
ஆகாசத்துக்கு 1 நாழிகை மிடம்‌
ஆக நாழிகையின்‌ படி பிரதானத்தில்‌ ஐந்து நாழிகையாகச்‌ சந்திரன்‌ கலையில்‌ மூன்று மூன்று பிரகாரமாகப்‌ பிரவேசிக்கும்‌.
பகலில்‌ 6 பிரகாரமும்‌, இரவில்‌ 6 பிரகாரமும்‌ ஓடும்‌. இவ்வாறு இரவுபகலாக 12 பிரகாரமும்‌ ஓடுவதற்கு ஐந்து நாழிகைக்கு ஒர்‌ இராசியாகப்‌ பனிரெண்டு இராசியிலும்‌
பனிரெண்டு இராசியும்‌ பனிரெண்டு பிரகாரம்‌ ஒடும்‌. ஆக இரவுபகலாகக்‌ கணக்கிட்டு 60 நாழிகையும்‌ வெற்றி, தோல்விக்‌ கணக்கிட்டுக்‌ கூறமுடியும்‌. வெல்வது யாரென்று கேட்டு
வருபவர்களுக்கு இருவர்‌ பேரின்‌ எழுத்தைக்‌ கணக்கிட்டுக்‌ கொண்டு, குறைந்த எழுத்துப்‌ போக உயர்ந்த எழுத்தை உடையவன்‌ வெல்வான்‌ என்று கூறமுடியும்‌.

நாளுக்கு ராசி இயங்கும்‌ விதம்‌
மேசம்‌ – 41, நாழிகை, ரிசபம்‌ – 4 1/, நாழிகை, மிதுனம்‌ – 5 1, நாழிகை, கற்கடகம்‌ — 5 1/, நாழிகை, சிம்மம்‌ – 5 17, நாழிகை, கன்னி – 5 நாழிகை, துலாம்‌ – 5 நாழிகை, விருச்சிகம்‌ – 5 1,
நாழிகை, தனுசு – 5 1, நாழிகை, மகரம்‌ – 5 7, நாழிகை, கும்பம்‌ 44, நாழிகை, மீனம்‌ – 4 17, நாழிகை, இராபகம்‌ 50 நாழிகையும்‌ சரியாக இயங்கும்‌ என்று அறியவேண்டும்‌.

யாத்திரை வேளை அறியும்‌ முறை
செவ்வாய்‌, வெள்ளி – காலமே இரசித வேளை. ஞாயிறு, புதன்‌, சனி – இம்‌ மூன்று நாட்களும்‌ தாமித காலம்‌. திங்கள்‌, வியாழன்‌ – இரண்டு நாட்களும்‌ சாந்தமான வேளை.
மற்ற நாட்களும்‌, நாழிகையும்‌ சாந்தமான வேளை. இப்படி மாறிமாறி வரும்‌ என்பதை அறியவேண்டும்‌. ஓருவன்‌ எங்கே என்று கேட்பவர்கள்‌ வந்தால்‌ பிரதிவியாகில்‌ வீற்றிருப்பான்‌.

அப்புவாகில்‌ முற்றத்தில்‌ இருப்பான்‌.
தேயுவாகில்‌ வருவான்‌.
வாயுவாகில்‌ வீற்றிருப்பான்‌.
ஆகாயமாகில்‌ மலை கடலுக்கு அப்பால்‌ இருப்பான்‌.

வருவானோ ? வரமாட்டானோ ? என்று கேட்பவர்களுக்கு
பிரதிவியாகில்‌ நிற்கிறான்‌. அப்புவாகில்‌ மீண்டும்‌ வருவான்‌. தேயுவாகில்‌ வழிப்‌ புறப்பட்டான்‌. வாயுவாகில்‌ ஊரில்‌ இருப்பான்‌. ஆகாயமாகில்‌ ஒரு நாழிகைக்குள்ளே
வருவானென்று சொல்லவும்‌.

மூவகை இராசியை அறியும்‌ முறை
சூரியன்‌ – சரராசி, சந்திரன்‌ – இராசியின்‌ இருபுறமும்‌ ஒடும்‌. அக்கினி – உபயராசி என்பதாகும்‌. பஞ்ச பூதங்களும்‌ இயங்கும்‌ விதம்‌ பிரதிவி பிரதிவி இயங்கும்‌ போது கோவில்‌ கட்ட, பிரதிட்டை செய்ய, வீடுப்புக, ஆபரணம்‌ வாங்க, பட்டம்‌ கட்ட, முடிச்‌ சூட்ட
முதலான காரியம்‌ மேற்கொள்ளவும்‌ மாமரம்‌ வைக்கவும்‌ நன்றாகும்‌.

அப்பு
அப்பு இயங்கும்‌ போது மலரி, வாவி, குளம்‌, கிணறு, சோலை, யாத்திரை, உழுதல்‌, கவி உரைக்க, மணம்‌ செய்ய மிகவும்‌ நன்றாகும்‌.

தேயு
கொடியது செய்ய, பிணி தீர்க்க நன்று. வாய்வு ஆனை, குதிரை தேரேறுதல்‌ நன்று.

ஆகாயம்‌
அமைதியாக இருப்பது நன்று. இப்படி ஐந்து பிரதானமும்‌’ இயங்கும்‌ வழியறிந்து செய்யவும்‌.

சரம்‌ இயங்குவதை அறிதல்‌
ஆராதாரத்தை ஊடுருவினால்‌ பிராண நாடியில்‌ நாளொன்றுக்கு வாசி 21600 சுவாசமோடும்‌. இதில்‌ 16400 சுவாசம்‌ உள்ளேயும்‌, இதில்‌ 7200 சுவாசம்‌ வெளியேயும்‌ இயங்கும்‌. 16100 சுவாசம்‌ சரீரத்தில்‌ நின்று உபத்திரம்‌ செய்து 12 அங்குலம்‌ மாறுப்பட்டு 4 அங்குலம்‌ புறம்பாகப்‌ போகும்‌.

வாரப்‌ பலன்‌ அறிதல்‌
ஞாயிறு தப்பில்‌ வியாதி திங்கள்‌ தப்பில்‌ வலி, போக்குண்டாகும்‌. செவ்வாய்த்‌ தப்பில்‌ சாவு நிகழும்‌. புதன்‌ தப்பில்‌ கலகம்‌ வியாழன்‌ தப்பில்‌ இராசாவுக்குத்‌ துன்பம்‌. வெள்ளி தப்பில்‌ ஊர்‌ விட்டுப்‌ போகும்‌ நிலை ஏற்படும்‌. சனி தப்பில்‌ பஞ்சம்‌ உண்டாகும்‌. ஒரு காரியம்‌ பொய்யா அல்லது உண்மையா என அறிதல்‌ சந்திரன்‌ என்றால்‌ பொய்‌, சூரியன்‌ என்றால்‌ மெய்‌ என்று அறியவும்‌.

காலமறிதல்‌
சூரியன்‌ ஒரு நாள்‌ ஓடினால்‌ மூன்று வருடத்தில்‌ மரணம்‌. இருபுறத்திலும்‌ மாறாமல்‌ பத்து நாழிகை இரவும்‌ பகலும்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. மூன்று நாட்கள்‌ ஒரே பக்கமாக ஒடினால்‌ ஒரு வருடத்தில்‌ மரணம்‌, வாயினால்‌ ஓடினால்‌ இரண்டு நாட்களில்‌ மரணம்‌. எக்காலமும்‌ இரவு முப்பதும்‌ சந்திரனிலும்‌ இயங்கினால்‌, பகல்‌ முப்பதும்‌ சூரியனிலும்‌ மாறாமல்‌ இயங்கினால்‌ நல்ல சிவயோகியாவான்‌. ஒரு புறத்தில்‌ ஆறு
நாட்கள்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌, பத்து நாள்‌ ஓடினால்‌ முப்பத்து இரணடு நாளில்‌ மரணம்‌.

சூரிய தரிசனம்‌
காற்று அடிக்காத போது மதியத்தில்‌ சூரியனை நோக்கிப்‌ பார்த்து நிலத்திலே குழிவெட்டி குழியில்‌ உமிழ்ந்து அதைப்‌ பார்த்தால்‌ “பஞ்ச வர்ணம்‌” – தோன்றி வில்‌ போல்‌ கண்டால்‌ வியாதியும்‌ சாவும்‌ அவ்வாண்டிலிருந்து மூன்று வருடத்திற்கும்‌ இல்லை. முறிந்து வில்லாய்‌ தோன்றினால்‌ பத்தாண்டில்‌ சாவு. அந்த முறிந்த வில்லில்‌ ஒரு பெண்‌ சொரூபம்‌ தோன்றினால்‌ ஆறாம்‌ பிறையில்‌ சாவு உண்டாகும்‌.

சந்திர தரிசனம்‌
பூர்ண சந்திரனில்‌ காற்றடிக்காத வேளையில்‌ செப்பு சட்டியில்‌ பசுவின்‌ நெய்‌ விட்டு அதனுள்‌ சந்திரனைப்‌ பார்த்தால்‌ சாதாரணமாகத்‌ தெரிந்தால்‌ ஆயுசு உண்டு. சிவப்பாகில்‌ வாழ்வு உண்டு. பச்சையாகில்‌ வியாதியுண்டு. பொன்‌ நிறமாக இருந்தால்‌ கேடு உண்டு. கறுப்பாகில்‌ சாவு உண்டு. இதுபோல்‌ இன்னொரு முறையும்‌ உண்டு. மதியும்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. வடக்கு, தெற்கு மதியானத்தில்‌ குறைந்தால்‌ மூன்று பிறையில்‌ மரணம்‌. தெற்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. கிழக்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ இரண்டு பிறையில்‌ மரணம்‌. நடுவில்‌ குறைந்து பள்ளமாக இருந்தால்‌ ஒரு பிறையில்‌ மரணம்‌., சர சாத்திரம்‌ உச்சித்‌ துடிக்கும்‌ போது அவ்வாண்டில்‌ மரணம்‌. கண்டம்‌ துடிக்கும்‌ போது இரண்டாண்டில்‌ மரணம்‌.

புயந்துடிக்கும்‌ போது ஆறு திங்களில்‌ மரணம்‌. கன்னம்‌ விடாமல்‌ துடிக்கும்‌ போது மூன்று திங்களில்‌ மரணம்‌. இடக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது தூரத்திலிருந்து வருவார்‌. வலக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது விருந்து வரும்‌. உருத்‌ தெரியாமல்‌ கண்ணொளி மயங்கில்‌ மூன்று நாளில்‌ மரணம்‌.

கனவின்‌ குறி
தென்திசையிலிருந்து இரதம்‌ வரக்‌ கண்டால்‌ மூன்றாண்டில்‌ மரணம்‌. அருந்ததி தெரியாமல்‌ இருந்தாலும்‌, தன்‌ மூக்கின்‌ முனைத்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌.

இதழ்‌ நாக்கிற்கு இடப்புறம்‌ எரிச்சல்‌ கண்டால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. உதடு, நாக்கு, பல்‌, தாது இவை கருத்துப்போனால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌.

சிறுத்த இடைப்‌ பருத்து, மார்பும்‌ பருத்தால்‌ சிறிது நாட்களில்‌ மரணம்‌. தண்ணீர்‌, கண்ணாடி, நெய்‌ இதில்‌ தன்‌ சிரசு தெரியாமல்‌ இருந்தால்‌ சிற்சில நாளில்‌ மரணம்‌. மகுடம்‌ கையினால்‌ செவியை மூடி வாக்கியங்கள்‌ உரைத்தாலும்‌ கேட்காமல்‌ இருந்தாலும்‌, பருத்த உடல்‌ சிறுத்தாலும்‌ ஒரு மாதத்தில்‌ மரணம்‌ அடைவான்‌. தன்‌ நிழல்‌
தெற்குச்‌ சாய்ந்தாலும்‌, தன்‌ நிழல்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலமான 48நாட்களில்‌ மரணம்‌.

குருபுத்திரனுக்குச்‌ சித்தியாவும்‌ கனவின்‌ குறி
பேய்‌, பூதம்‌, இராட்சதர்‌, கருங்காகம்‌, குரங்கு, புலி, கரடி, செந்நாய்‌ இவை கனவில்‌ தினசரி வந்தால்‌ நல்ல பக்குவமான 60, 70, 80 தில்‌ மரணம்‌. எண்ணெய்த்‌ தேய்க்கவும்‌, முடிக்‌ கத்தரிக்கவும்‌, தென்‌ திசையிலிருந்து ஒருவன்‌ ஓலைக்‌ கொண்டு வந்து அழைத்துப்‌ போகக்‌ கண்டால்‌ ஒரு திங்களில்‌ மரணம்‌.

கல்யாணம்‌ செய்யவும்‌, கருமேனி உடையவனாகவும்‌, கருங்காவி, தடி வைத்திருத்தல்‌, கரம்‌ கூப்பிட, தலையில்‌ முண்டாசுக்‌ கட்டியிருத்தாலும்‌ இவர்கள்‌ யாரேனும்‌ வந்து
அழைத்தால்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌ உண்டாகும்‌.

கைக்கொண்டு தன்‌ தலையில்‌ கைவைத்து ஒருவர்‌ பேசுவதைக்‌ கேட்காமல்‌ போனால்‌ அந்த மாதத்தில்‌ மரணம்‌.

வாரப்பலன்‌
திங்கள்‌, புதன்‌, வெள்ளி ஆகிய மூன்று நாளும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. சனி, செவ்வாய்‌, ஞாயிறு ஆகிய மூன்று நாளும்‌ காலையில்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கும்‌, பூர்வ பட்சத்திற்கும்‌, அமரபட்சத்திற்கும்‌ சந்திரன்‌ சூரியன்‌ இரண்டிலும்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌. அமரபட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌.

உ – குருவே துணைஹரி ஓம்‌ நன்றாக வாழ்ககுரு மொழி விவரம்‌ ? – சரவித்தை – 9

பரமேசுவரரைத்‌ திருமுகம்‌ நோக்கிப்‌ பார்வதியம்மன்‌ கேட்கும்‌ விதம்‌
சுவாமி வாக்கினாலே நான்கு வேதம்‌, ஆறு சாத்திரம்‌, பதினெண்‌ புராணம்‌, பஞ்சாங்கம்‌ மற்ற பல சாத்திரத்தினால்‌ விவரித்து சொல்லாமல்‌ நினைத்தப்படி ஒரு காரியம்‌ சொல்ல
சாத்திரம்‌ உண்டோ ? என்று பரமேசுவரரைப்‌ பார்த்துப்‌ பார்வதி கேட்க, பரமேசுவரர்‌ திருவாய்மொழிந்து சொல்லுதல்‌.

கேள்‌ பெண்ணே ! பரம இரகசியமான சர சாத்திரம்‌ உண்டு. அந்தச்‌ சாத்திரம்‌ நினைத்தபோது சகல காரியமும்‌ சொல்லலாம்‌. அந்தச்‌ சாத்திரத்தைச்‌ சொல்கிறேன்‌ கேள்‌. சரம்‌ பார்ப்பது சிவத்‌ தியானம்‌ இடைவிடாமல்‌ குரு பாதத்தில்‌ நினைவையும்‌, மனத்தையும்‌ வைத்துச்‌ சர நிலையறிந்து பார்த்தால்‌ இடகலையாவது, இடது புறமாகும்‌. இது சந்திரன்‌. இது பெண்‌. இது அமிர்தம்‌. இதன்‌ நிறம்‌ கறுப்பு. இதன்‌ இராசி திரராசி என்றும்‌ பேராகும்‌.

பின்‌ கலையாவது வலப்புறம்‌. அதன்‌ குறியன்‌ ஆண்‌. இதன்‌ நிறம்‌ வெள்ளை. இது சரராசிஎன்று பேராகும்‌. உபயம்‌ இரண்டிலும்‌ ஓடுகிறது. சுழிமுனை என்பர்‌. இது அக்கினி. நிறம்‌ சிவப்பு, இதனை உபயராசி என்று அறியவும்‌. சுழிமுனை அறிதல்‌ சுழிமுனையாவது இடகலைக்கும்‌, பின்‌ கலைக்கும்‌ நடுவே நிற்கும்‌. இது மூலநாடி என்றும்‌, இது பிராணவாயு மூலாதாரம்‌ தொடங்கி, பிரமாந்திரம்‌ மட்டும்‌ ஊடுருவி, அஞ்சுரு வாணி போல்‌ இயங்கும்‌. எழுபத்தாறாயிரம்‌ நாடி நரம்பிலும்‌ 96 தத்துவத்திலும்‌ தட்டாமல்‌ சூட்சாதி சூட்சமாய்‌ இயங்கும்‌.

மனம்‌, நினைவு அறிவினால்‌ குருவருளைப்‌ பற்றி அறியவேண்டும்‌. இவற்றுக்கெல்லாம்‌ ரேசகமான வாயுவை விடுவதாகும்‌. பூரகமாவது வாயுவை உள்ளே வாங்குவதாகும்‌. கும்பகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ உள்ளே நிறுத்துவதாகும்‌. தடாகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ சமதானம்‌ செய்வதாகும்‌.

இந்த நான்கு வகைப்‌ பிரமாணம்‌ சதிராய்‌ கைவந்த சிவஞான யோகிகளுக்குத்‌ தெரிவதோடு அல்லாமல்‌ மற்ற தேவர்கள்‌, மானிடர்களாலேயும்‌ விளக்கமுடியாது. அந்தப்‌
பரப்பிரம்ம மார்க்க சிவத்தின்‌ விவரம்‌ சொல்லக்‌ கேள்‌.

சந்திர பலன்‌
சந்திரன்‌ பலன்‌ உதயமாகையில்‌ ஆடை உடுக்கவும்‌, ஆபரணம்‌ தரிக்கவும்‌, விவாகம்‌ செய்யவும்‌, அடிமைக்‌ கொள்ளவும்‌, கிணறு வெட்டவும்‌, மனை கட்டவும்‌ குடிபுகுவதும்‌,
வித்துக்‌ கட்டவும்‌, வேலை செய்யவும்‌, மன்னரைக்‌ காணவும்‌, உண்மை சொல்லவும்‌, சாந்தி பண்ணவும்‌, பிரதிஷ்டை செய்யவும்‌, சரம்‌ தவிர்க்கவும்‌, வெப்புத்‌ தீர்க்கவும்‌, வித்தைக்‌ கற்கவும்‌, தனம்‌ புதைக்கவும்‌, கடன்‌ கொடுக்கவும்‌ முதலானவை நன்மையான காரியம்‌ சந்திரனில்‌ செய்து முடிக்க வெற்றியாகும்‌.

சூரியபலன்‌
சூரியன்‌ உதயமாகும்போது, உபதேசம்‌ கேட்கவும்‌, கொடுக்கல்‌ வாங்கல்‌ செய்யவும்‌, படையெடுக்கவும்‌, பலிக்‌ கொடுக்கவும்‌, பண்ட பாத்திரங்கள்‌ செய்யவும்‌ – வாங்கவும்‌, சூதாடவும்‌, வழக்குத்‌ தொடுக்கவும்‌, கீதம்‌ பாடவும்‌ எழுதவும்‌, கரி பரியில்‌ ஏறவும்‌, தேன்கலந்த சொற்களைச்‌ சொல்லவும்‌, பகை முடிக்கவும்‌, பேய்‌ பிசாசு தீர்க்கவும்‌, மந்திரங்கள்‌ உச்சரிக்கவும்‌, மருந்துண்ணவும்‌, உறங்க, குளிக்க, குலவையிட அவை போன்ற கூறுகளைத்‌ தீர்க்கவும்‌, முப்போகம்‌ செய்யவும்‌, ஜலத்‌ தர்ப்பணம்‌ செய்யவும்‌, வெள்ளாமை செய்யவும்‌ நன்றாக அமையும்‌.

உபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌
உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.
ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌.

சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌ ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற
வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறிஉபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌ உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.

ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌. சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌
ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறி
வைத்தியம்‌ செய்பவர்‌ போகும்‌ போது காயம்‌, படுகுறி சொல்வது. பிரதிவிக்கு முதுகு, அப்புவுக்குக்‌ கால்‌, அக்கினிக்கு மார்பி, வாய்வுக்குக்‌ கை, ஆகாயத்துக்குத்‌ தலை. இப்படி ஐந்து பூதமும்‌ நிற்பதை அறிந்து செல்லவும்‌. கெட்டவனுக்கு இன்னவிடத்தில்‌ காயம்‌ படுமென்றும்‌ கூறலாம்‌. இவற்றிற்கு மேல்‌ பிரதானம்‌ சந்திரனுக்கு இடப்புறம்‌ என்றும்‌, சூரியனுக்கு வலப்புறம்‌ என்றும்‌, ஆகாயத்துக்குப்‌ படுவான்‌ என்றும்‌ சொல்லலாம்‌.

யாரொருவன்‌ கெட்டவனெனக்‌ குறிப்பறிதல்‌
ஒருவன்‌ கெட்டவன்‌ என்றும்‌, நஞ்சுத்‌ தின்றான்‌ என்றும்‌, சொன்னபடி நடந்தால்‌ சூனியமாகில்‌ பலிக்கும்‌. பூரணமாகில்‌ பலிக்காது. பஞ்ச பூதங்கள்‌ இயங்கும்‌ வகையறியும்‌ முறை பிரதிவியோடும்‌ போது மூக்குத்‌ தண்டைத்‌ தட்டியோடும்‌, தேய்வு ஒடும்‌ போது மேல்‌ விழும்பைத்‌ தட்டியோடும்‌, வாய்வு ஒடும்‌ போது பக்கத்து விழும்பைத்‌ தட்டி ஓடும்‌. ஆகாசம்‌ ஓடும்‌ போது ஒன்றிலும்‌ தட்டாமல்‌ ஓடும்‌ என அறியலாம்‌.

பஞ்ச பூத நிறமறிதல்‌
பிரதிவி – பொன்‌ நிறம்‌. இதன்‌ கோணம்‌ நான்குச்‌ சதுரம்‌. நீளம்‌ 12 விரல்‌ கடையோடும்‌.
அப்புவு – வெண்மை நிறம்‌. பிறை போலிருக்கும்‌. துவர்ப்புண்டு. இதன்‌ நீளம்‌ 16 விரல்‌ கடையோடும்‌.

அக்கினி – சிவப்பு நிறம்‌. முக்கோண வடிவம்‌.
காரத்தன்மை உடையது. 8 விரல்‌ கடையோடும்‌.
வாய்வு – நீல நிறம்‌. புளிப்புத்‌ தன்மையுடையது.
அறுகோண வடிவம்‌. 6 விரல்‌ கடையோடும்‌.
ஆகாசம்‌ – புகை நிறம்‌. வட்ட வடிவம்‌. நாரதமில்லை. ஒரு விரல்‌ கடையோடும்‌. அப்படி ஐந்து பிரதானமும்‌ இயங்கும்‌ என அறியவும்‌. இதில்‌ பிரதிவியின்‌ நிறம்‌ நல்லது. அக்கினி, வாய்வு ஆகாசமும்‌ தீதாகும்‌.

ஆண்‌, பெண்‌ கொண்ட பிணி தீருமோ?, தீராதோ?
என்று ஆண்‌ கொண்ட பிணிக்கு ஆண்‌ வந்து ஆண்களிடத்தில்‌ கேட்டால்‌ தீருமெனவும்‌, பெண்‌ கொண்ட பிணிக்குப்‌ பெண்‌ வந்து பெண்ணிடத்தில்‌ கேட்டால்‌ தீரும்‌ என்றும்‌, இவை
இயங்கும்‌, இயங்காத திசையில்‌ வந்து நின்றால்‌ நடந்தாலும்‌, கிடந்தாலும்‌ பெண்‌ கேட்டப்‌ பிணிக்கு ஆண்திசை இயங்குகின்ற திசையில்‌ பெண்‌ வந்து நின்றால்‌ சிறிது நாட்கள்‌
சென்று தீரும்‌ எனவும்‌, ஆரம்பத்தில்‌ பெண்‌ திசையில்‌ வந்த ஆணுக்கு
முன்போல்‌ சொல்லவும்‌. இதுக்குப்‌ பெண்ணுக்குப்‌ பெண்ணிடத்திலும்‌, ஆணுக்கு ஆணிடத்திலும்‌ சுத்தாங்கமாகத்‌ தீரும்‌.

பிள்ளை நிறமறிதல்‌
ஐந்து பூதமும்‌ இயங்குவது அறிந்து பூபோகம்‌ செய்யும்‌ போது எந்தப்‌ பூதம்‌ இயங்குமோ, அந்தப்‌ பூதநிறமே கர்ப்ப காலத்தில்‌ விந்து தரிக்கும்‌. அந்தப்‌ பிள்ளைக்கு மந்த நிறம்‌
அந்தக்‌ குணமே உண்டாகுமென அறியவும்‌.

பிணி கொண்ட பேருக்குப்‌ பஞ்ச பூதம்‌
இயங்கும்‌ குறிப்பறிதல்‌ பிரதிவிக்கு நாள்‌ சென்று தீரும்‌. அப்புக்குச்‌ சீக்கீரமாகத்‌
தீரும்‌. தேயுவுக்கு மூன்று நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மூன்று நாட்களில்‌ மரணம்‌. வாய்வாகில்‌ இரண்டு நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மரணம்‌ ஆகாசமாகில்‌ ஏழு நாட்களில்‌ மரணம்‌. உபயமானால்‌ ஐந்து நாட்களில்‌ மரணம்‌. இது தப்பினால்‌
மரணமில்லை என்று கேட்ட பேருக்கு வந்தறிந்து சொல்லவும்‌.

கர்ப்ப சோதனை
கற்பம்‌ ஆணோ ?, பெண்ணோ ?- என்று கேட்டால்‌ கேட்பவருக்கு இயங்கும்‌ திசையாகில்‌ பிள்ளையில்லை எனலாம்‌. இதில்‌ சிதறி ஓடினால்‌ பிறந்தழியும்‌ எனலாம்‌. சந்திரன்‌ என்றால்‌ பெண்‌, சூரியன்‌ என்றால்‌ ஆண்‌ என்று சொல்லவும்‌. பிறந்த பிள்ளை பிழைக்குமா ? என்று கேட்டால்‌, பிள்ளைப்‌ பிறந்த செய்தி யாரொருவன்‌ வந்து கேட்கின்றானோ ? ஆண்‌, பெண்‌ பிறந்த செய்தியறிந்து ஆணுக்குச்‌ சூரியனும்‌, பெண்ணுக்குச்‌ சந்திரனும்‌ இயங்கும்‌ போது ஸ்ரீ போகம்‌ செய்யவேண்டும்‌. இதில்‌ ஆணுக்குச்‌ சூரியனோடினால்‌ ஆண்‌ என்றும்‌, சந்திரன்‌ ஓடினால்‌ பெண்‌ என்றும்‌ சொல்லவும்‌.

விசமறிதல்‌
_ விசமுண்டோ இல்லையோ ?என்றால்‌ சூரியனாகில்‌ விசம்‌ என்றும்‌, சந்திரனாகில்‌ விசம்‌ தீராது என்றும்‌, இயங்கும்‌ திசையில்‌ வந்து இயங்காத்‌ திசையில்‌ வந்து கேட்டால்‌ விசம்‌ கடினம்‌ என்றும்‌ அறிந்து கூறவும்‌.

சர இயக்கம்‌ அறிதல்‌
வெள்ளி, திங்கள்‌, புதன்‌ மூன்று நாட்களிலும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கு அமரபட்சம்‌, பூர்வபட்சம்‌ இரண்டிலும்‌ இயங்கும்‌ வகையறிதல்‌ அமரபட்சத்தில்‌ சூரியன்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்தில்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்காவிட்டால்‌ சரீரத்துக்குப்‌ பயமும்‌, வியாதியும்‌ உண்டாகும்‌. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்குச்‌ சந்திரனும்‌, திங்களுக்குச்‌ சூரியனும்‌ ஓடினால்‌ பயமுண்டாகும்‌. இதன்படி ஏழு வாரமும்‌ மாறி ஒடினால்‌ மரணமுண்டாகும்‌. இவ்வாறு இல்லாமல்‌ ஞாயிற்றுக்குச்‌ சூரியனும்‌, திங்களுக்குச்‌ சந்திரனும்‌ ஓடினால்‌ மிகவும்‌ நல்லது. இப்படி ஏழு நாட்களும்‌ தவறாமல்‌ ஓடினால்‌ ஆயுசுக்‌ கூடும்‌. நல்ல சிவயோகி சிவ ஞானியாக இருப்பான்‌ என்று அறியவும்‌.

சரம்‌ பார்த்து கிரிகை அறிதல்‌
சந்திரன்‌ வீடாக இருந்து போசனம்‌ செய்தால்‌ உணவானது துவத்தல்‌, காரத்தன்மையிலும்‌ இருக்கும்‌. சூரிய வீடாக இருந்தால்‌ உணவானது நெய்‌, பால்‌, புளி, கரிப்பு முதலானவற்றை விட்டு விடவும்‌. இப்படி சாப்பிடும்‌ முன்‌ முதலில்‌ தண்ணீர்‌ குடிக்காமல்‌ பாதி வயிற்றுக்குச்‌ சாதமும்‌, கால்‌ வயிற்றுக்குத்‌ தண்ணீரும்‌, கால்‌ வயிற்றுக்கு வாயுப்‌ பட்சணமும்‌ மாறியோடும்‌ போது இடக்கைக்‌ கீழும்‌ படுத்திருந்து சரீர சுத்தி செய்து கொண்டு ஒட்டியாணமும்‌ தரித்துக்கொண்டு சரம்‌ பார்த்தால்‌ சிதறாமல்‌ ஓடும்‌. இப்படி நான்கு வகைக்‌ காலமும்‌ சிதறாமல்‌ ஓடும்‌.

வயதை அறிதல்‌
ஒவ்வொரு கலையிலும்‌ ஐந்து நாழிகைச்‌ சரம்‌ இயங்கும்‌. இதில்‌ ஒரு நாழிகைக்‌ குறைந்தாலும்‌ இருபது வயது குறையும்‌. ச–6

இதுமட்டும்‌ அல்லாமல்‌ சரம்‌ உதிக்கும்‌ போது ஸ்ரீபோகம்‌ செய்தால்‌ அந்த வேளையில்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌. பிள்ளைக்கு வயது குறையாது என்று அறியவும்‌. கெடுதி வருமோ ? வராதோ? என்றால்‌ சந்திரன்‌ எனில்‌ வரும்‌. சூரியன்‌ எனில்‌ வராது. சந்திரனில்‌ இருந்து ஓடினால்‌ கொஞ்சம்‌ வந்து போகும்‌. அடைப்பட்டால்‌ வராது எனவும்‌ அறியலாம்‌.
பக்கம்‌ பதினைந்திற்கும்‌ காலம்‌ அறிதல்‌ அமரபட்சம்‌ சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதமை முதல்‌ பதினைந்து நாளும்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌.

பூர்வபட்சம்‌
சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதிமை முதல்‌ காலம்‌ பதினைந்து நாட்களும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்கினால்‌ வியாதியும்‌, கேடும்‌ விளையும்‌. மழை நாளிலும்‌
அகப்படுவர்‌ எனவும்‌ அறியலாம்‌.

பஞ்சபூதம்‌ சந்திரன்‌ சூரியனில்‌ இயங்கும்‌ வகையறிதல்‌
பிரதிவிக்கு 1 1/, நாழிகை (நிமிடம்‌)
அப்புவுக்கு 1 1/, நாழிகை மிடம்‌)
தேய்வுக்கு 1 நாழிகை இமிடம்‌)
வாய்வுக்கு 1 5/, நாழிகை மிடம்‌
ஆகாசத்துக்கு 1 நாழிகை மிடம்‌
ஆக நாழிகையின்‌ படி பிரதானத்தில்‌ ஐந்து நாழிகையாகச்‌ சந்திரன்‌ கலையில்‌ மூன்று மூன்று பிரகாரமாகப்‌ பிரவேசிக்கும்‌.|

பகலில்‌ 6 பிரகாரமும்‌, இரவில்‌ 6 பிரகாரமும்‌ ஓடும்‌. இவ்வாறு இரவுபகலாக 12 பிரகாரமும்‌ ஓடுவதற்கு ஐந்து நாழிகைக்கு ஒர்‌ இராசியாகப்‌ பனிரெண்டு இராசியிலும்‌
பனிரெண்டு இராசியும்‌ பனிரெண்டு பிரகாரம்‌ ஒடும்‌. ஆக இரவுபகலாகக்‌ கணக்கிட்டு 60 நாழிகையும்‌ வெற்றி, தோல்விக்‌ கணக்கிட்டுக்‌ கூறமுடியும்‌. வெல்வது யாரென்று கேட்டு
வருபவர்களுக்கு இருவர்‌ பேரின்‌ எழுத்தைக்‌ கணக்கிட்டுக்‌ கொண்டு, குறைந்த எழுத்துப்‌ போக உயர்ந்த எழுத்தை உடையவன்‌ வெல்வான்‌ என்று கூறமுடியும்‌.

நாளுக்கு ராசி இயங்கும்‌ விதம்‌
மேசம்‌ – 41, நாழிகை, ரிசபம்‌ – 4 1/, நாழிகை, மிதுனம்‌ –
5 1, நாழிகை, கற்கடகம்‌ — 5 1/, நாழிகை, சிம்மம்‌ – 5 17, நாழிகை,
கன்னி – 5 நாழிகை, துலாம்‌ – 5 நாழிகை, விருச்சிகம்‌ – 5 1,
நாழிகை, தனுசு – 5 1, நாழிகை, மகரம்‌ – 5 7, நாழிகை, கும்பம்‌ 44, நாழிகை, மீனம்‌ – 4 17, நாழிகை, இராபகம்‌ 50 நாழிகையும்‌ சரியாக இயங்கும்‌ என்று அறியவேண்டும்‌.

யாத்திரை வேளை அறியும்‌ முறை
செவ்வாய்‌, வெள்ளி – காலமே இரசித வேளை. ஞாயிறு, புதன்‌, சனி – இம்‌ மூன்று நாட்களும்‌ தாமித காலம்‌. திங்கள்‌, வியாழன்‌ – இரண்டு நாட்களும்‌ சாந்தமான வேளை.
மற்ற நாட்களும்‌, நாழிகையும்‌ சாந்தமான வேளை. இப்படி மாறிமாறி வரும்‌ என்பதை அறியவேண்டும்‌.

ஓருவன்‌ எங்கே என்று கேட்பவர்கள்‌ வந்தால்‌
பிரதிவியாகில்‌ வீற்றிருப்பான்‌. அப்புவாகில்‌ முற்றத்தில்‌ இருப்பான்‌.
தேயுவாகில்‌ வருவான்‌. வாயுவாகில்‌ வீற்றிருப்பான்‌. ஆகாயமாகில்‌ மலை கடலுக்கு அப்பால்‌ இருப்பான்‌.

வருவானோ ? வரமாட்டானோ ? என்று கேட்பவர்களுக்கு
பிரதிவியாகில்‌ நிற்கிறான்‌. அப்புவாகில்‌ மீண்டும்‌ வருவான்‌. தேயுவாகில்‌ வழிப்‌ புறப்பட்டான்‌. வாயுவாகில்‌ ஊரில்‌ இருப்பான்‌. ஆகாயமாகில்‌ ஒரு நாழிகைக்குள்ளே
வருவானென்று சொல்லவும்‌.

மூவகை இராசியை அறியும்‌ முறை
சூரியன்‌ – சரராசி, சந்திரன்‌ – இராசியின்‌ இருபுறமும்‌ ஒடும்‌. அக்கினி – உபயராசி என்பதாகும்‌. பஞ்ச பூதங்களும்‌ இயங்கும்‌ விதம்‌ பிரதிவி பிரதிவி இயங்கும்‌ போது கோவில்‌ கட்ட, பிரதிட்டை செய்ய, வீடுப்புக, ஆபரணம்‌ வாங்க, பட்டம்‌ கட்ட, முடிச்‌ சூட்ட
முதலான காரியம்‌ மேற்கொள்ளவும்‌ மாமரம்‌ வைக்கவும்‌ நன்றாகும்‌.

அப்பு
அப்பு இயங்கும்‌ போது மலரி, வாவி, குளம்‌, கிணறு, சோலை, யாத்திரை, உழுதல்‌, கவி உரைக்க, மணம்‌ செய்ய மிகவும்‌ நன்றாகும்‌.

தேயு
கொடியது செய்ய, பிணி தீர்க்க நன்று.

வாய்வு
ஆனை, குதிரை தேரேறுதல்‌ நன்று.

ஆகாயம்‌
அமைதியாக இருப்பது நன்று. இப்படி ஐந்து பிரதானமும்‌’ இயங்கும்‌ வழியறிந்து செய்யவும்‌.

சரம்‌ இயங்குவதை அறிதல்‌
ஆராதாரத்தை ஊடுருவினால்‌ பிராண நாடியில்‌ நாளொன்றுக்கு வாசி 21600 சுவாசமோடும்‌. இதில்‌ 16400 சுவாசம்‌ உள்ளேயும்‌, இதில்‌ 7200 சுவாசம்‌ வெளியேயும்‌ இயங்கும்‌. 16100 சுவாசம்‌ சரீரத்தில்‌ நின்று உபத்திரம்‌ செய்து 12 அங்குலம்‌ மாறுப்பட்டு 4 அங்குலம்‌ புறம்பாகப்‌ போகும்‌.

வாரப்‌ பலன்‌ அறிதல்‌
ஞாயிறு தப்பில்‌ வியாதி திங்கள்‌ தப்பில்‌ வலி, போக்குண்டாகும்‌. செவ்வாய்த்‌ தப்பில்‌ சாவு நிகழும்‌. புதன்‌ தப்பில்‌ கலகம்‌ வியாழன்‌ தப்பில்‌ இராசாவுக்குத்‌ துன்பம்‌. வெள்ளி தப்பில்‌ ஊர்‌ விட்டுப்‌ போகும்‌ நிலை ஏற்படும்‌. சனி தப்பில்‌ பஞ்சம்‌ உண்டாகும்‌.

ஒரு காரியம்‌ பொய்யா அல்லது உண்மையா என அறிதல்‌
சந்திரன்‌ என்றால்‌ பொய்‌, சூரியன்‌ என்றால்‌ மெய்‌ என்று அறியவும்‌.
காலமறிதல்‌ சூரியன்‌ ஒரு நாள்‌ ஓடினால்‌ மூன்று வருடத்தில்‌ மரணம்‌. இருபுறத்திலும்‌ மாறாமல்‌ பத்து நாழிகை இரவும்‌ பகலும்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. மூன்று நாட்கள்‌ ஒரே பக்கமாக ஒடினால்‌ ஒரு வருடத்தில்‌ மரணம்‌, வாயினால்‌ ஓடினால்‌ இரண்டு
நாட்களில்‌ மரணம்‌. எக்காலமும்‌ இரவு முப்பதும்‌ சந்திரனிலும்‌ இயங்கினால்‌, பகல்‌ முப்பதும்‌ சூரியனிலும்‌ மாறாமல்‌ இயங்கினால்‌ நல்ல சிவயோகியாவான்‌. ஒரு புறத்தில்‌ ஆறு நாட்கள்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌, பத்து நாள்‌ ஓடினால்‌ முப்பத்து இரணடு நாளில்‌ மரணம்‌.

சூரிய தரிசனம்‌
காற்று அடிக்காத போது மதியத்தில்‌ சூரியனை நோக்கிப்‌ பார்த்து நிலத்திலே குழிவெட்டி குழியில்‌ உமிழ்ந்து அதைப்‌ பார்த்தால்‌ “பஞ்ச வர்ணம்‌” – தோன்றி வில்‌ போல்‌ கண்டால்‌ வியாதியும்‌ சாவும்‌ அவ்வாண்டிலிருந்து மூன்று வருடத்திற்கும்‌ இல்லை. முறிந்து வில்லாய்‌ தோன்றினால்‌ பத்தாண்டில்‌ சாவு. அந்த முறிந்த வில்லில்‌ ஒரு பெண்‌ சொரூபம்‌ தோன்றினால்‌ ஆறாம்‌ பிறையில்‌ சாவு உண்டாகும்‌.

சந்திர தரிசனம்‌
பூர்ண சந்திரனில்‌ காற்றடிக்காத வேளையில்‌ செப்பு சட்டியில்‌ பசுவின்‌ நெய்‌ விட்டு அதனுள்‌ சந்திரனைப்‌ பார்த்தால்‌ சாதாரணமாகத்‌ தெரிந்தால்‌ ஆயுசு உண்டு. சிவப்பாகில்‌ வாழ்வு உண்டு. பச்சையாகில்‌ வியாதியுண்டு. பொன்‌ நிறமாக இருந்தால்‌ கேடு உண்டு. கறுப்பாகில்‌ சாவு உண்டு.

இதுபோல்‌ இன்னொரு முறையும்‌ உண்டு. மதியும்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. வடக்கு, தெற்கு மதியானத்தில்‌ குறைந்தால்‌ மூன்று பிறையில்‌ மரணம்‌. தெற்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌.

கிழக்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ இரண்டு பிறையில்‌ மரணம்‌. நடுவில்‌ குறைந்து பள்ளமாக இருந்தால்‌ ஒரு பிறையில்‌ மரணம்‌, சர சாத்திரம்‌ உச்சித்‌ துடிக்கும்‌ போது அவ்வாண்டில்‌ மரணம்‌. கண்டம்‌ துடிக்கும்‌ போது இரண்டாண்டில்‌ மரணம்‌. புயந்துடிக்கும்‌ போது ஆறு திங்களில்‌ மரணம்‌. கன்னம்‌ விடாமல்‌ துடிக்கும்‌ போது மூன்று திங்களில்‌ மரணம்‌.

இடக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது தூரத்திலிருந்து வருவார்‌. வலக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது விருந்து வரும்‌. உருத்‌ தெரியாமல்‌ கண்ணொளி மயங்கில்‌ மூன்று நாளில்‌ மரணம்‌.

கனவின்‌ குறி
தென்திசையிலிருந்து இரதம்‌ வரக்‌ கண்டால்‌ மூன்றாண்டில்‌ மரணம்‌. அருந்ததி தெரியாமல்‌ இருந்தாலும்‌, தன்‌ மூக்கின்‌ முனைத்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌.

இதழ்‌ நாக்கிற்கு இடப்புறம்‌ எரிச்சல்‌ கண்டால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. உதடு, நாக்கு, பல்‌, தாது இவை கருத்துப்போனால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌.

சிறுத்த இடைப்‌ பருத்து, மார்பும்‌ பருத்தால்‌ சிறிது நாட்களில்‌ மரணம்‌. தண்ணீர்‌, கண்ணாடி, நெய்‌ இதில்‌ தன்‌ சிரசு தெரியாமல்‌ இருந்தால்‌ சிற்சில நாளில்‌ மரணம்‌.

மகுடம்‌ கையினால்‌ செவியை மூடி வாக்கியங்கள்‌ உரைத்தாலும்‌ கேட்காமல்‌ இருந்தாலும்‌, பருத்த உடல்‌ சிறுத்தாலும்‌ ஒரு மாதத்தில்‌ மரணம்‌ அடைவான்‌. தன்‌ நிழல்‌
தெற்குச்‌ சாய்ந்தாலும்‌, தன்‌ நிழல்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலமான 48 நாட்களில்‌ மரணம்‌.

குருபுத்திரனுக்குச்‌ சித்தியாவும்‌ கனவின்‌ குறி பேய்‌, பூதம்‌, இராட்சதர்‌, கருங்காகம்‌, குரங்கு, புலி, கரடி, செந்நாய்‌ இவை கனவில்‌ தினசரி வந்தால்‌ நல்ல பக்குவமான
60, 70, 80 தில்‌ மரணம்‌. எண்ணெய்த்‌ தேய்க்கவும்‌, முடிக்‌ கத்தரிக்கவும்‌, தென்‌ திசையிலிருந்து ஒருவன்‌ ஓலைக்‌ கொண்டு வந்து அழைத்துப்‌ போகக்‌ கண்டால்‌ ஒரு திங்களில்‌ மரணம்‌.

கல்யாணம்‌ செய்யவும்‌, கருமேனி உடையவனாகவும்‌, கருங்காவி, தடி வைத்திருத்தல்‌, கரம்‌ கூப்பிட, தலையில்‌ முண்டாசுக்‌ கட்டியிருத்தாலும்‌ இவர்கள்‌ யாரேனும்‌ வந்து
அழைத்தால்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌ உண்டாகும்‌.

கைக்கொண்டு தன்‌ தலையில்‌ கைவைத்து ஒருவர்‌ பேசுவதைக்‌ கேட்காமல்‌ போனால்‌ அந்த மாதத்தில்‌ மரணம்‌.

வாரப்பலன்‌
திங்கள்‌, புதன்‌, வெள்ளி ஆகிய மூன்று நாளும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. சனி, செவ்வாய்‌, ஞாயிறு ஆகிய மூன்று நாளும்‌ காலையில்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கும்‌, பூர்வ பட்சத்திற்கும்‌, அமரபட்சத்திற்கும்‌ சந்திரன்‌ சூரியன்‌
இரண்டிலும்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌. அமரபட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌.


மெளனம்‌ எது? சமாதி எது? – சரவித்தை – 8

பிரம்ம ஞானிகளுக்குச்‌ சர்வ வாசனைகளும்‌ சூனியமாகும்‌. மெளனத்தை விட உயர்ந்தது யாதொன்றும்‌ இல்லை. மெளனம்‌ என்றால்‌ பிரபஞ்ச தர்மசம்பந்தங்களை விட்டுச்‌ சகல சங்கல்பங்களையும்‌ ஒழித்து பிரம்ம சொரூபனாயிருக்கப்‌ பட்டவனுக்கு ஆனந்தத்தைக்‌
கொடுக்கும்‌. இந்த மெளனமே “தியானம்‌’ – என்று சொல்லப்படும்‌.

மெளனம்‌ என்றால்‌ யாருடனும்‌ பேசாமல்‌ வாய்மூடிக்‌ கொண்டிருப்பது அன்று. மனத்தை வெளியில்‌ விடாமல்‌ நிறுத்துவதே மெளனம்‌ ஆகும்‌.

“பால்யம்‌” – என்றால்‌ சிரவணம்‌. “பாண்டித்தியம்‌” – என்றால்‌ மனனம்‌. “மெளனம்‌” – என்றால்‌ நிதித்தியாசனம்‌, இம்மூன்றையும்‌ விட்டுத்‌ தன்னைத்‌ தான்‌ மறந்து பிரம்ம
சொரூபியாக இருப்பதே மெளனம்‌.

கடாகாசம்‌, மஹாகாசம்‌ ஊகமாவது போல்‌ ஆத்மாவே பரப்பிரம்மம்‌ என்றும்‌, பரப்பிரம்மமே “ஆத்மா” – என்றும்‌ ஐக்கிய பாவத்தை அடைந்து, ஆத்ம சொரூபியாகிய, நீயே பிரம்மமென்று நிச்சயித்துச்‌ சகல எண்ணங்களையும்‌ மறந்து கல்சிலை வடிவமாய்‌ ஆனந்தப்படுவதே மெளனபாகும்‌.

வாசனைத்‌ திரவியங்களும்‌, மோட்சத்தின்‌ இச்சையும்‌ விட்டு, உலகம்‌ அனைத்தும்‌ “அசத்தியம்‌” – என்றும்‌, “பிரம்மமே சத்தியம்‌” – என்றும்‌, பிரம்மத்தைத்‌ தியானிக்க வேண்டும்‌. பிறகு அந்தத்‌ தியானத்தையும்‌ விட்டு மனோ புத்திகள்‌ இரண்டையும்‌
சஞ்சலமில்லாமல்‌, அசையாமல்‌, திடமாக நிறுத்தி, இருதயத்திலிருக்கும்‌ காமக்‌ குரோதாதிகளாகிய அழுக்குகளை எல்லாம்‌ நீக்கி, மனத்தை நிர்மலமாகச்‌ செய்து கொண்டு அந்தப்‌ பரப்பிரம்மமே நானென்றும்‌, நானே சர்வமென்றும்‌ மெளனமாகவும்‌, அமைதியாகவும்‌ இருப்பதே பரமசுகம்‌.

ஆத்ம சொரூபியாகிய நானே பிரம்மமென்று ஐக்கிய பாவத்தில்‌ திடமாய்‌ நின்று, சகலமனோ விருத்திகளும்‌, சூனியமாய்‌ எந்த எண்ணங்களும்‌ இல்லாமல்‌ கண்களுக்குக்‌
காணப்படும்‌ சகல பொருட்களும்‌, சகல எண்ணங்களும்‌ மறந்து, தானே தானாகச்‌ சக்தி மாந்தனாய்‌ இருப்பதே சமாதியாகும்‌.

மனம்‌ வயப்பட மூன்றாம்‌ முறை உபதேசித்தல்‌ – சரவித்தை – 7

இதனடியில்‌ உபதேசிக்கும்‌ “உபதேசம்‌: – இதுவரையில்‌ உபதேசித்திருந்த போதிலும்‌ மாயைக்குள்‌ அகப்பட்டிருக்கும்‌ பெண்களும்‌, ஆண்களும்‌ அந்த மாயையிலிருந்து விடுபட
அவர்கள்‌ மனத்திற்கு நன்றாக விளங்கும்படி, மறுபடியும்‌ மூன்றாம்‌ முறையும்‌ விளக்கப்படுகிறது. முன்பே கூறியது போல்‌ ஒருநாள்‌ சுவாசத்தை அடக்கிப்‌ பார்ப்பார்களேயானால்‌ இதன்‌ அனுபவம்‌ உங்களுக்கு உயர்வானதாக அறியமுடியும்‌.
மானிடப்பிறவி கடைத்தேற எல்லா உபதேசங்களும்‌ இந்நூலில்‌ எழுதப்பட்டிருக்கின்றன. கடைத்தேறுபவர்களுக்கு இந்நூல்‌ ஒன்றே போதுமானதாக இருக்கின்றது என உறுதியாகக்‌ கூறமுடியும்‌.

நாம்‌ ஒரு காரியம்‌ நினைத்து வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுப்‌ போகும்போது, எந்த எண்ணங்களும்‌ இல்லாமல்‌ வழிநடந்து குறித்த நேரத்திற்குள்‌ போய்ச்‌ சேர்ந்து அவ்விடத்திலுள்ள வேலைகளைப்‌ பார்க்கும்‌ போது மட்டும்‌ மனத்தை அக்காரியங்களில்‌ கவனமாக வைத்து இருப்போம்‌. பின்‌ அதற்கு வேண்டிய வேலைகள்‌ எல்லாவற்றையும்‌ செய்து முடித்து மறுபடியும்‌ வீட்டிற்குத்‌ திரும்பி வருவோம்‌.

அப்பொழுது என்ன வேலை செய்து முடித்தோமோ அல்லது அவ்வேலைகளைச்‌ செய்யாமல்‌ திரும்பி வந்தோமோ, அல்லது வேறு எந்த வேலையாவது அறிந்து கொண்டோமோ அதனை நினைக்காமல்‌ இருக்கவேண்டும்‌. மேலும்‌ இரண்டாம்‌
மந்திரங்களையும்‌ சுவாசத்துடன்‌ சேர்த்து உள்ளுக்குள்‌ இழுக்கும்போது, வெற்றி கொண்டு வருவதே இராஜயோகம்‌ என்று சொல்லப்படுகிறது. உபநிடதங்களும்‌, பெரியோர்களும்‌
சொல்லுவதும்‌ இதுவேயாகும்‌. இப்படிப்பட்ட மகா இரகசியத்தை உங்களுக்கு இதன்‌ மூலம்‌ தெளிவாக்குகிறோம்‌.

பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின்‌ மனத்தை எல்லாம்‌ எதுவும்‌ நினையாமல்‌ அமைதியாக இருக்கச்‌ செய்யவேண்டும்‌, அவ்வாறு இருக்காமல்‌ அதற்கு நேர்மாறாக இருந்து, மனத்தின்‌ போக்கிற்கு ஏற்றபடி நடக்கின்றது. எவ்வாறு எனில்‌, ஏதாவது ஒரு காரியத்தை வீட்டை விட்டு வெளியில்‌ கிளம்பியவுடன்‌ தண்ணீரில்‌ நீர்க்குமிழிகள்‌ தோன்றித்‌ தோன்றி எவ்வளவு சீக்கிரமாக மறைகின்றனவோ அதுபோல்‌, நிமிடத்திற்குள்‌ கணக்கற்ற எண்ணங்கள்‌ தோன்றித்‌ தோன்றி அப்போதே இமைக்‌ கொட்டுவதற்குள்‌ மறைந்து, மனம்‌ வேறு காரியத்தில்‌ ஈடுபட்டு ஓடி, அதையும்‌ மறந்து மறுபடியும்‌ வெவ்வேறு
காரியங்களில்‌ யோசனை செய்து கொண்டே இருக்கும்‌. இவ்வாறு தான்‌ குறித்த இடம்போய்‌ சேர்வதற்குள்‌ பலவிதமான யோசனைகள்‌ தோன்றித்தோன்றி அக்கணமே மறைந்து மறுபடியும்‌ அந்த ஞாபகம்‌ இல்லாமல்‌ பூர்த்தியாக மறந்து விடுகிறது.

பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின்‌ மனத்தை எல்லாம்‌ இந்நிலையே எப்பொழுதும்‌ உண்டாகிக்‌ கொண்டே இருக்கும்‌. இப்படிப்பட்ட மனத்தை எப்பொழுதும்‌ அடக்கியிருக்க
வேண்டுமென்றால்‌, சாதாரணமான மக்கள்‌ அவரவர்களின்‌ வேலைகளை முடித்து,
நிம்மதியடைய இரவு பதினொரு மணியாகும்‌.

அதற்குமேல்‌ விழித்து மூன்று மணிக்குள்‌ எழுந்திருக்க வேண்டும்‌. இதனிடையே நித்திரையில்‌ இருக்கும்‌ போது நாலுமணி நேரம்‌ மட்டுமே இந்தப்பாழான மனம்‌ நித்திரையில்‌ அடங்கியிருக்கும்‌. அச்சமயத்திலும்‌ மனம்‌ கனவினைக்‌ காணத்‌
தொடங்கும்‌.

கனவில்‌ தன்‌ வீட்டில்‌ திருடர்கள்‌ வீட்டிலுள்ள பொருட்களைக்‌ கொண்டு போனாலும்‌, தன்‌ மீது பாம்பு ஏறினாலும்‌, தன்‌ உடலில்‌ துணிகள்‌ இல்லாமல்‌ போனாலும்‌, தனக்குத்‌ தெரியாமல்‌ தன்னைத்தான்‌ மறந்து நித்திரை செய்கின்றான்‌. அப்படிப்பட்ட சமயத்தில்‌ மனக்கண்‌ நினைவுகளின்‌ மூலமாக அறிந்து எதையும்‌ பார்ப்பதில்லை.

அப்படியிருக்கும்போது இரவு நித்திரையில்‌ மனம்‌ வெளியில்‌ சென்று திரிந்து தான்‌ இரவு நித்திரையில்‌ கண்ட பொருட்களை எல்லாம்‌ காலையில்‌ அம்மனம்‌ எவ்விதமாகச்‌
சொல்லுகின்றதோ, அதனையே நினைத்துக்‌ கனவில்‌ கண்டவற்றை மறுபடியும்‌ ஞாபகத்திற்குக்‌ கொண்டு வரும்படிச்‌ செய்கின்றான்‌. அதனால்‌ மனமும்‌ தான்‌ கண்டவற்றை எல்லாம்‌ எடுத்துக்‌ காட்டுகின்றது.

ம்மனம்‌ ஒவ்வொரு சமயத்தில்‌ கனவே இல்லாமல்‌ அடங்கியிருக்கும்‌. அப்படி அடங்கியிருப்பதே “சுழுத்தி” – என்பர்‌. அதாவது மனத்திற்கு இந்தச்‌ சுழுத்திய தன்மையை அடைந்து இருப்பதே “சமாதிநிலை” – என்று சொல்லப்படுகிறது. இந்தச்‌ சமாதிநிலையில்‌ காணப்படும்‌ தன்மையே யோக திருட்டி எனவும்‌ கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சமாதியில்‌ மனம்‌ ஈடுபடாமல்‌ இருப்பது, “பிரளயகாலம்‌* வந்தபோது பிரபஞ்சம்‌ எல்லாம்‌ எவ்விதமாகத்‌ தண்ணீரில்‌ மூழ்கி விடுகின்றனவோ, அதுபோல்‌
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களின்‌ மனத்தில்‌ எல்லாம்‌ இரவு நித்திரையில்‌ நாலுமணி நேரம்‌ நித்திரையில்‌ இருந்து நித்திரை விட்டு எழுந்தவுடன்‌ மறுபடியும்‌ இரவு நித்திரை செய்யும்‌ வரையில்‌ மனமானது எத்தனை எண்ணங்களை எண்ணிக்‌
கொண்டிருக்கும்‌. அப்படி எண்ணிய எண்ணங்கள்‌ எல்லாம்‌ ஞாபகத்தில்‌ இருக்காது. ஆனால்‌ அவர்களுக்கு எது முக்கியமான தகவலோ, அதுமட்டுமே ஞாபகமிருக்கும்‌.
மற்றவற்றை மறந்துவிடும்‌.

மனம்‌ எப்படி நிமிடத்திற்குள்‌ நினைத்து உடனே மறந்து விடுகின்றதோ, அதேபோல்‌ பிரபஞ்சத்திலுள்ள உயிர்களின்‌ மனத்தை எல்லாம்‌ மாயையால்‌ கட்டுப்பட்டு அவை
நிமிடத்திற்குள்‌ அழிந்து போகும்‌ தேகமாகும்‌. வெகுகாலங்கள்‌ இருப்பதாக எண்ணி, அதிகத்‌ துன்பங்களை அடைந்து, நல்வழியிலும்‌, துன்மார்க்க விருத்தியிலும்‌ திரவியம்‌ சம்பாதித்து இப்போதுள்ள ஆண்‌, பெண்‌ பிள்ளைகளுக்குச்‌ சொத்துகளைச்‌ சேகரித்துக்‌ கொண்டே வரவர, ஆயுத்தமாக இருக்கின்றனர்‌.

இவ்வாறு இருந்தபோதிலும்‌ திடீரென ஏதோ வியாதிக்கு ஆட்பட்டு, இவ்வுயிர்‌ இவ்வுடலை வட்டுப்‌ பிரிந்து வேறொரு உடலுக்குப்‌ போய்‌ பிரவேசித்து மறுபிறப்பை
எடுக்கின்றது. அங்குச்‌ சிலநாட்களிலிருந்து அந்தப்‌ பிறப்பில்‌ புதியதாய்‌ வரும்‌ ஆண்‌, பெண்பிள்ளைகளுக்கு மறுபடியும்‌ தினம்‌ சம்பாதித்து வைத்து, மறுபடியும்‌ மரணமடைந்து வேறு உடலுக்குப்‌ போய்‌ மறுபடியும்‌ அங்குள்ள ஆண்‌, பெண்பிள்ளை
களுக்குச்‌ சொத்துச்‌ சேர்த்து வைத்து இப்படியாகப்‌ பல பிறவிகளை எடுத்து பெண்பிள்ளைகளின்‌ மேல்‌ அதிகப்‌ பற்றுக்‌ கொள்வதனால்‌ பிறவி அதிகரித்துக்‌ கொண்டே வருகின்றன.

கடவுள்‌ ஆண்‌, பெண்களை இப்படிப்பட்ட ஆசையைத்‌ தூண்டி அவர்களைச்‌ சூத்திரதாரியைப்‌ போல்‌ இருந்து ஆட்டி அவர்களின்‌ கூத்துகளை எல்லாம்‌ பார்த்துக்‌ கொண்டு வருகின்றான்‌. ஆதலால்‌ இந்தக்‌ கடவுள்‌ மாயைக்கு உட்படாமல்‌
தப்பித்துக்‌ கொள்ளும்‌ பொருட்டே இந்நூல்‌ எழுதப்பட்டது. ஆண்‌, பெண்களுக்குக்‌ கடவுளால்‌ மறைக்கப்‌ பட்டிருக்கும்‌ மாயையை நீக்க, இந்நூல்‌ ஒன்றே போதுமானதாக இருக்கின்றது.

இந்நூலைப்‌ படித்து இதில்‌ கூறிய உபதேசத்தைச்‌ சதாகாலமும்‌ அப்படியே யோசித்து வந்தால்‌, மேலான ஞானத்தைப்‌ பெறப்‌ பாத்திரமாவார்கள்‌. ஆதலால்‌ இதனடியில்‌
சொல்லப்‌ போகும்‌ இரண்டு மந்திரங்களைப்‌ பரிசீலித்து வந்தால்‌ உங்கள்‌ மனம்‌ வெளியில்‌ ஒடாமல்‌ நின்றால்‌, இச்சுவாசப்‌ பயிற்சியை எக்காலமும்‌ செய்து கொண்டே வரவேண்டும்‌.

ஒரு காரியமாக வெளியே செல்லும்போது அங்குமிங்கும்‌ பார்க்காமல்‌ சாலையில்‌ வண்டிகளின்‌ பயமில்லாமல்‌ இருக்க வேண்டும்‌. அதற்காக வலக்கை ஓரமாகச்‌ சென்று
தலைகுனிந்து தன்பாத பெருவிரலிலிருந்து மூன்றடி தூரத்தில்‌ பார்வையை வைத்துப்‌ பார்த்துக்‌ கொண்டே செல்லவேண்டும்‌. அச்சமயம்‌ சுவாசம்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாகப்‌ பிரவேசிக்கும்போது, அந்தச்‌ சுவாசத்துடன்‌ கூடவே ‘ஸோ”

என்று சொல்லாமல்‌ மனத்தினால்‌ நினைத்து சுவாசத்தை உள்ளிழுத்து மறுபடியும்‌ சுவாசம்‌ வெளியே வரும்போது அதனுடன்‌ கூடவே ‘ஹம்‌’ என்ற மந்திரத்தைச்‌ சேர்த்து
வெளியில்‌ விடவேண்டும்‌. இவ்வாறு ஒவ்வொரு மூச்சு உள்‌ செல்லும்போதும்‌, வெளிவரும்போதும்‌ இவ்விரண்டு மந்திரங்களைச்‌ சேர்த்துச்‌ செய்து கொண்டே வழியில்‌ நடக்க வேண்டும்‌.

இவ்விதமாக எப்பொழுதும்‌ அதாவது நடக்கும்‌ போதும்‌, இருக்கும்‌ போதும்‌, படுக்கும்‌ போதும்‌, மலசலம்‌ கழிக்கும்‌ போதும்‌, பேசுகின்ற போதும்‌, எந்த நேரமும்‌ இதை அனுசரித்து வந்தால்‌ மனம்‌ வசமாகும்‌. இந்தச்‌ சுவாசம்‌ நிமிடத்திற்கு 15 முறை
நடக்கின்றது. இப்படி நாள்‌ ஒன்றிற்கு 24 மணி நேரத்திற்குள்‌ இருபத்தோராயிரத்து அறுநூறு முறை சுவாசங்கள்‌ நடந்து கொண்டிருக்கும்‌. இப்படிப்பட்ட மகாரகசியத்தின்‌ அம்சமான சூத்திரமாகிய சுவாசத்தை வீணாகச்‌ செலவழிக்காமல்‌ மேற்சொல்லிய இரண்டு மந்திரங்களைச்‌ சேர்த்து நடத்தவேண்டும்‌. இப்படி நடத்தும்போது அதனை
“இராஜயோகம்‌” – என்று சொல்வார்கள்‌.

இந்த இராஜயோகத்தை எல்லாச்‌ சாதியினரும்‌, குடும்பத்திலுள்ள ஆண்‌, பெண்‌ அனைவரும்‌ அனுசரித்து வர, இந்நூல்‌ வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ளது.

மனோ ஒட்டத்தை நிறுத்த உபாயம்‌ – சரவித்தை – 6

எவருக்கு எண்ணமெல்லாம்‌ நசிந்து விடுகின்றனவோ, அவர்களுக்கு மோட்சம்‌ உள்ளங்கை நெல்லிக்கனி போல்‌ இருக்கும்‌. எப்பொழுதும்‌ சகல எண்ணங்களையும்‌ நசிக்கச்‌ செய்கின்றார்களோ . . – அப்பொழுதே பிரம்ம சொரூபர்களாய்‌
முத்தியை அடைகி றொர்கள்‌. சகல எண்ணங்களையும்‌ நசிக்கச்‌ செய்ய ஓர்‌ உபாயம்‌ உண்டு.

அதைக்‌ கவனமுடன்‌ கவனித்து அதுபோல்‌ அப்பியாசம்‌ செய்து வந்தால்‌ சகல எண்ணங்களும்‌ ஒழிந்து பிரம்மானந்தப்‌ பதவியை அடையலாம்‌. எண்ணங்களிலேயே பிறவிகள்‌ உண்டாகின்றன. எண்ணங்கள்‌ இல்லாவிடில்‌ பிறவியில்லை என்று உபநிடதங்களில்‌ கூறப்பட்டிருக்கின்றன.

ஆதலால்‌, சகல எண்ணங்களையும்‌ தலையெடுக்க விடாமல்‌ செய்வதே மனோநாசத்திற்கு முக்கியமான உபாயம்‌. எவ்வாறெனில்‌ நமக்கு எண்ணமெல்லாம்‌ பிரம்ம தானத்திலிருந்து உண்டாகின்றன. இந்த நாபியான பிரம்மதானத்தை
வெட்டவெளியாகப்‌ பார்த்தபோது எண்ணங்களெல்லாம்‌ உதித்த
இடத்திலேயே ஒடுங்கும்‌.

எப்படியெனில்‌ சென்னையை என மனம்‌ நினைத்த உடனே “செ’ என்னும்‌ எழுத்து நாபியிலிருந்து புறப்படும்‌. அதி நாபியிலிருந்து வெளியே வரவிடாமல்‌ உள்முகமாய்‌ அந்த நாபியின்‌ இடத்தை ஆகாய ரூபமாய்‌ பார்த்தபோது வெட்டவெளியாய்‌, அதாவது வெற்றிடமாய்‌ இருந்தால்‌ “செ” என்னும்‌ எழுத்து உதித்த இடத்திலேயே ஒடுங்கும்‌. முதல்‌ எழுத்து ஒடுங்குவதால்‌ அதன்‌ பின்‌ வரும்‌ எழுத்துக்கெல்லாம்‌ (எண்ணங்களெல்லாம்‌) ஒடுங்கிவிடும்‌.

சுவாசமும்‌, மனமும்‌ ஒன்றுவதால்‌ மனம்‌ நின்றால்‌ சுவாசமும்‌ நின்றுவிடும்‌. மனத்தின்‌ சுபாவகுணம்‌ எண்ணங்களே ஆகும்‌. சுவாசம்‌ என்னும்‌ காற்று நாபியில்‌ பிறந்து, மூக்குத்‌
துவாரங்களின்‌ வழியாக ஓயாமல்‌ வெளிவந்து, ஒவ்வொரு சுவாசமாய்‌ இறந்து கொண்டேவரும்‌. அப்போது சிறிய சிறிய உதவியற்றதும்‌, ஞாபகமில்லாததுமாகிய அனைத்து எண்ணங்களும்‌ நாபியிலிருந்து வெளியேவரும்‌. சுவாசம்‌ என்னும்‌ காற்றில்‌ மனதென்னும்‌ எண்ணங்கள்‌ அடிக்கடிப்‌ பிறந்து பிறந்து மறைந்து நசிந்து கொண்டே வரும்‌. இப்படிக்‌ காற்று உருவகமாகயிருக்கும்‌ மனத்தை நிறுத்த உபாயத்தைக்‌ காண்போம்‌.

ஒரு புற்றிலிருந்து பாம்பானது, வெளிவரும்‌ சமயத்தில்‌ அப்புற்றின்‌ அருகில்‌ ஒரு மனிதன்‌ நின்றிருந்தால்‌ அவனைப்‌ பாம்பு பார்த்தவுடன்‌ பயந்து வெளிவராமல்‌ புற்றுக்குள்‌
போய்விடும்‌. மறுபடியும்‌ பத்து நிமிடங்கள்‌ சென்ற பிறகு பாம்பானது புற்றிலிருந்து மறுபடியும்‌ வெளியே வந்து எட்டிப்‌ பார்க்கும்‌. அம்மனிதன்‌ விலகிப்‌ போகாமல்‌ நின்றிருந்தால்‌, அப்பாம்பானது மீண்டும்‌ புற்றுக்குள்‌ போய்விடும்‌. அம்மனிதன்‌
புற்றுக்கருகிலிருந்து விலகிப்போய்‌ விட்டால்‌ பாம்பு வெளியே போய்விடும்‌. அதுபோல நாபி புற்றென்றும்‌, சுவாசம்‌ (மூச்சு) பாம்பென்றும்‌ கொண்டால்‌, அந்தச்‌ சுவாசம்‌ என்னும்‌ பாம்பில்‌ அனைத்து வகையான எண்ணங்களும்‌ அடிக்கடி உதித்து உதித்து இறந்துவிடும்‌. இந்த எண்ணங்களையே மனம்‌ என்று சொல்லுவார்கள்‌. இந்த மனம்‌ காற்றின்‌ உருவமாக இருந்த போதிலும்‌ அதன்‌ குணத்தைக்‌ காண்போம்‌.

எந்த எண்ணங்களும்‌ இல்லாமல்‌ வெற்று வெளியாக இருக்கும்பொழுது, கடைக்குப்‌ போக வேண்டும்‌. இன்னென்ன பொருட்களை வாங்க வேண்டுமென்றும்‌, இப்படிப்பட்ட
பலவிதமான எண்ணங்கள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக உதித்து உதித்து, நீர்‌ அலைகளிலிருந்து உண்டாகிய நீர்க்குமிழிகள்‌, திவாலைகள்‌, நுரைகள்‌, உடனுக்குடன்‌ மறைந்து விடுவது போல்‌, யிரக்கணக்கான உதித்த எண்ணங்கள்‌ யாவும்‌ மனம்‌ என்னும்‌ நீர்க்குமிழிகள்‌ சுவாசம்‌ என்னும்‌ அலையில்‌ பிறந்து, “சுவாசம்‌’ – என்னும்‌ அலையிலேயே மறைந்து போகும்‌.

ப்பொழுது என்ன செய்யவேண்டுமென்றால்‌ முன்‌ சொல்லிய புற்றுக்குள்‌ இருந்த பாம்பானது, வெளிவராமல்‌ எப்படிப்‌ புற்றுக்குள்‌ அடங்கியிருக்கிறதோ அதுபோல்‌, நாபி என்னும்‌ புற்றிலிருந்து சுவாசம்‌ என்னும்‌ பாம்பு புறப்படும்போது அதிலிருந்து
கடைக்குப்‌ போக வேண்டும்‌. இன்னென்ன பொருட்களை வாங்கவேண்டும்‌ என்று எண்ணம்‌ உதிக்கும்‌.

அப்போது முதல்‌ எழுத்தாகிய க” என்னும்‌ எழுத்துப்‌ புறப்பட்ட உடனே நில்‌ ? நீ எங்கே புறப்படுகிறாய்‌ மனமே, புறப்படுப்‌ பார்ப்போம்‌ என்று கண்களை மூடி நாபியிடம்‌
அகத்தினுள்ளே வெற்று வெளியாகப்‌ பார்த்தோம்‌ என்றால்‌ எந்த எழுத்து நாபியிலிருந்து முதலில்‌ பிறக்கின்றதோ, அவ்வெழுத்தைப்‌ புறப்படாதவாறு நாபியினிடம்‌ வெளிவெளியாகப்‌ பார்க்க வேண்டும்‌. அப்போது உலகத்தை எல்லாம்‌ ஆளும்‌ சக்கரவர்த்தி அரசர்களையெல்லாம்‌ தம்‌ ஆக்ஞுக்குள்‌ நிறுத்துவது போல்‌, இந்திரிய வியாபாரங்கள்‌
யாவும்‌ நின்றுவிடும்‌.

ஆதலால்‌, அசுத்தமான மனத்தை ஆத்ம ஞானத்தினால்‌ நாசம்‌ செய்வதோடு மனம்‌ வெளி விகாரங்களில்‌ ஓடாமல்‌ நின்று விடும்‌. மனம்‌ எப்பொழுது நின்று விடுகின்றதோ அப்போதே மூச்சு ஆடாமல்‌ நின்றுவிடும்‌. மூச்சு நின்றவுடன்‌ காதினால்‌ கேட்பது, மூக்கினால்‌ வாசனை அறிவது, வாயினால்‌ பேசுவது, கண்களால்‌ பார்ப்பது, சீதோசணங்களால்‌ அறிவது முதலாகிய இந்திரிய வியாபாரங்கள்‌ ஓடுங்கி, தான்தானாய்‌ கல்‌ பொம்மையைப்‌ போல்‌ சமாதி நிலையில்‌ நின்று பிரம்மானந்தத்தில்‌ ஒருவிதமான சுகத்தில்‌ உறைந்து இருப்பார்‌. மூச்சு நாபியிலிருந்து பிறக்கின்றது. அதாவது தொப்புளிலிருந்து மூச்சு புறப்படுகின்றது. அந்தத்‌ தொப்புளிலிருக்கும்‌ இடமே
சிதாகாசம்‌’ – என்றால்‌ சிறிய ஆகாசம்‌ வெளி என்று சொல்லப்படுகின்றது.

மேலே சொல்லிய மனத்தின்‌ சொரூப உண்மை நிலைகளையெல்லாம்‌ முன்னுள்ள பெரியோர்கள்‌, பரம இராசர்களும்‌, மற்றவர்களும்‌ தெளிவாய்‌ அறியும்படி எளிய
வசனநடையில்‌ கவிகளாகவும்‌, பாடல்களாகவும்‌, சுலோகங்களாகவும்‌, சுருதிகளாகவும்‌, மறைபொருளாகப்‌ பாடிச்‌ சென்றார்கள்‌.

மலிதர்கள்‌ பெரும்பாலும்‌ சாதாரண உரை தெரிந்து கொள்வார்களே ஒழிய, உள்‌ இரகசியமான ஆழ்ந்த கருத்துகளை அறியமாட்டார்கள்‌. மேற்கூறிய கவிகள்‌,
பாடல்கள்‌, சுலோகங்கள்‌, சுருதிகள்‌ முதலானவற்றுக்கு எல்லாம்‌ உள்‌ கருத்தும்‌, இரகசியங்களும்‌ இந்நூலில்‌ விரிவாகவும்‌, தெளிவாகவும்‌ சுலபமான வசனநடையில்‌ எழுதி வெளியிடப்பட்டிருகின்றன. ஆதலால்‌ இந்நூலில்‌ சொல்லியது
போல்‌ பயிற்சி செய்து வரவேண்டும்‌.

பத்து வித நாத சப்தங்கள்‌ – சரவித்தை – 5

கேளப்பா கேசரமே அண்டஉச்சி
கெட்டியாய்க்‌ கண்டவர்க்கே மெளனம்‌ ஆகும்‌
ஆளப்பா பரப்பிரம்மம்‌ யோகமென்று
அடுக்கையிலே போதமுந்தான்‌ உயரத்‌ தூக்கும்‌
வாளப்பா கெவுனமணிவிந்து நாதம்‌
வலுத்திதடா கெட்டியாய்‌ திரண்டுபோகும்‌
நாளப்பா அண்டமெல்லாம்‌ சித்தியோடும்‌
நடனமிடும்‌ சிலம்பொலியும்‌ காணலாமே

(இ. எள்‌) பிராணவாயு சுவாசத்தை ஓம்‌ என்னும்‌ மந்திரத்துடன்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாய்‌ உள்ளுக்குள்‌ இழுத்து நிறுத்தவேண்டும்‌. பிராணயாமம்‌ செய்யும்‌ போது ஒம்‌ ஓம்‌
ஓம்‌ ஓம்‌ ஓம்‌ என்னும்‌ பிரணவ மந்திரத்தைச்‌ சேர்த்து உள்ளுக்கு இழுத்து மறுபடியும்‌ சுவாசத்தை வெளிவராத படிக்‌ கண்டத்தில்‌ நிறுத்தி விடவேண்டும்‌.

அப்போது அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலில்‌ சிலநேரம்‌ தங்கியிருக்கும்‌. பிறகு அந்தச்‌ சுவாசம்‌ நுரையீரலிருந்து வெளிவரும்‌. அப்போது யோகியானவன்‌ கண்டத்திடம்‌ மூடி விடுவதால்‌ அந்தச்‌ சுவாசம்‌ மூக்குத்‌ துவாரத்தின்‌ வழியே வெளிவராமல்‌ தொண்டைக்குப்‌ பின்புறமாய்‌ இருக்கும்‌ இரப்பைக்‌ குழியின்‌ வழியாக 22 அடி நீளமுள்ள குடல்‌
முழுமையும்‌ அந்தச்‌ சுவாசம்‌ செல்லும்‌.

பிறகு அவ்விடத்திலிருந்து மூலாதாரம்‌ என்னும்‌ குதத்தினிடம்‌ போய்‌ அச்சுவாசம்‌ அபானவாயுவாய்‌ வெளியே போக ஆரம்பிக்கும்‌. அப்போது யோகியானவன்‌ அந்தச்‌
சுவாசத்தை அபானவாயுவாகப்‌ போகவிடாமல்‌ இரண்டு பிண்டங்களையும்‌ கெட்டியாய்‌ இடுக்கிப்பிடியாக இழுத்துப்‌ பிடிக்கவேண்டும்‌. பின்‌ அது வெளியே போகாமல்‌ பின்புறமாக
இருக்கும்‌ முதுகெலும்பின்‌ வழியாகப்‌ போகும்‌.

முதுகெலும்பில்‌ 33 எலும்புக்‌ கூட்டுக்குள்‌ படிப்படியாய்‌ அமைக்கப்பட்டி ருக்கும்‌ துவாரத்தின்‌ மத்தியில்‌ வெள்ளை நரம்பு ஒன்று இருக்கும்‌. இந்நரம்பிற்கு முதுகுத்தண்டு (ஸ்பைனல்‌ கார்டு) என்று ஆங்கிலத்தில்‌ கூறுவர்‌.

அது தாமரைச்‌ செடியிலுள்ள சிறிய நூல்களைப்‌ போன்று சிறு துவாடிங்களால்‌ மேற்படி மூக்குத்துவாரங்களின்‌ வழியாக உள்ளிழுத்து நிறுத்திய சுவாசமானது அப்பியாச முதிர்ச்சியினால்‌ மெதுவாக அவ்வெள்ளை நரம்பில்‌ ஏறிச்‌ செல்ல வேண்டும்‌. பிராணயாமம்‌ செய்பவர்களுக்கு மட்டுமே முதுகெலும்பில்‌ இருக்கும்‌ வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின்‌ வழியாகச்‌ சுவாசம்‌ மேலேறிச்‌ செல்லும்‌. இதற்குக்‌ காகப்புசாண்டர்‌ பாடலில்‌,

போமடாமுன்‌ சொன்ன நரம்பினூடே
பூரித்து ஆவி மதியும்சுடர்தாக்க மூன்றாம்‌
ஆமடாபின்னையுந்தான்‌ கீழே பாயும்‌
அந்தரங்கந்தன்னைப்‌ பார்க்க அடங்கிப்போகும்‌
நாமடா வெளியில்‌ திறந்து சொல்லி விட்டோம்‌
நாதாந்த பரப்பிரம்மநாட்டந்தன்னை சன
ஓம்சுடா விந்துந்தான்‌ அண்ட உச்சி
உறுதியுடன்‌ சித்தமதை ஊன்றிப்‌ பாரே

என விவரிக்கின்றார்‌. அதாவது, பூரித்த இரவி மதியும்‌ சுடர்‌ தான்‌. மூன்றாம்‌ என்றால்‌ வலதுநாசி, இடதுநாசி இரண்டு நாசிகளிலும்‌ உள்ளிழுத்து நிறுத்திய மூன்று சுவாசத்திற்கும்‌ அதிகளவுக்‌ கோபமுண்டாகும்‌. அக்கினி சுவாலையைப்‌ போல்‌ கிளம்பி
தஸ்தானத்திற்கு கீழ்நோக்கிச்‌ சிங்கக்‌ குட்டியைப்‌ போல்‌ அதிகவேகமாகப்‌ பாய்ந்து முதுகெலும்பின்‌ வழியாக மேலேறி மூலதானத்தைச்‌ சேர்ந்து அங்குள்ள “விந்து: – என்று சொல்லும்‌ அமிர்தத்தைத்‌ தமது வெப்பத்தினால்‌ உருக்கிக்‌ கண்டத்தில்‌
விழச்‌ செய்து, தான்‌ நாதாநந்தத்தில்‌ ஐக்கியமாகி விடும்‌.

இதையடைய வேண்டுமாயின்‌ திடச்‌ சித்தம்‌ உடையவனாக இருந்து பிராண யாமம்‌ செய்து வரவேண்டும்‌. யோகத்‌ தன்மையினால்‌ சுவாசம்‌ முதுகெலும்பின்‌ பின்‌ வழியாக
மேலேற்றிச்‌ சகல நாடிகளையும்‌ கிளப்பியவுடன்‌ நாத சப்தங்கள்‌ உண்டாகும்‌.

அப்போது சுவாசமானது, முன்‌ சொல்லிய சுழிமுனை நாடியின்‌ வழியாகச்‌ சென்று பிரம்ம கபாலாத்தைத்‌ தாக்கி அவ்விடத்திலிருந்து இச்சரீரத்திலிருக்கும்‌ எழுபத்தி ஆறாயிரம்‌ நாடிகளிலும்‌ சென்று அந்தந்த நாடிகளை அவ்வவ்விடத்தில்‌ தங்கவிடாமல்‌ அந்தந்த இடங்களைக்‌ கிளப்பி விடுவதால்‌ நாடிகள்‌ யாவும்‌ தத்தம்‌ இடத்தைவிட்டுக்‌ கிளம்பி சர்ப்பம்‌ சீறிக்‌ கொண்டு ஓங்காரத்துடன்‌ கிண்கிணி, சங்கு, வீணை, தாளம்‌,
கண்டா, பேரி, மிருதங்கம்‌, மேளநாதங்கள்‌ முதலான பத்து வகையான வாத்தியங்களும்‌ நாடியின்‌ வழியாகத்‌ தொனித்துக்‌ கொண்டு காதின்‌ வழியாகச்‌ சதாகாலமும்‌ கேட்டுக்‌ கொண்டே இருக்கும்‌.

ஒரு கிழ அரசன்‌, வேற்றரசன்‌ போர்க்களத்திற்கு வந்தபோது கிழ அரசன்‌ தன்‌ குமாரனை அழைத்து அப்பா, குழந்தாய்‌! வேற்றரசன்‌ நம்‌ மீது படையெடுத்து வந்திருக்கின்றான்‌. நீ சென்று அந்த வேற்றரசனை வெற்றி கொள்வாய்‌ என அனுப்பினான்‌. அக்குமாரனும்‌ சென்று வேற்றரசனை வெற்றி கொண்டு திரும்ப வருகையில்‌, அவன்‌ தந்தையாகிய கிழவரசன்‌ கேள்விப்பட்டுத்‌ தன்னிடமுள்ள இராச்சியத்தை முன்கூட்டியே அனுப்பி அக்குமாரனை எதிர்கொள்வது போலாகும்‌.

நமது கடவுளானவர்‌ அவனின்‌ கடினத்தன்மையால்‌ “பிராணாயாமம்‌” செய்து சம்சாரம்‌ என்னும்‌ சமுத்திரத்தைக்‌ கடந்து கரையேற்றி விட்டது போல்‌ ஆனந்தமடைந்து மேற்கூறிய பத்து வித நாதங்களையும்‌ காதில்‌ கேட்கும்படி முன்னால்‌ அனுபவித்துத்‌ தந்து பிறகு காட்சியைத்‌ தருகின்றார்‌.

இந்தத்‌ தேகமென்னும்‌ ஆலயத்தில்‌ மேற்கூறிய பத்துவித நாதங்களையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து, பிறகு அதைக் கடந்து பிரம்மக்‌ கபாலத்திலிருக்கும்‌ ஆகாச வடிவத்தில்‌ மனம்‌ ஐக்கியமாகி விடும்‌.

இவ்வாறு மனம்‌ ஐக்கியமாகி விடுவதால்‌, தன்னுடைய உண்மை வடிவம்‌ தானாகவே நின்று கொண்டிருக்கும்‌. அதாவது தானே தானாவான்‌. முப்பத்தாறு தத்துவங்களுக்கும்‌
அதிகப்பட்சம்‌ இந்த ஓசையை யார்‌ கேட்கின்றார்களோ? அவர்களே முக்தர்கள்‌, அவர்களே பிரம்மஞானிகள்‌. யார்‌?

ஒருவர்‌ சகல எண்ணங்களையும்‌ விட்டுச்‌ சித்த விருத்தியடைந்து அந்நிய சாத்திரங்களிலும்‌ சமத்த போகங்களிலும்‌ இச்சை இல்லாதவர்களாய்‌, “மாயை” – என்னும்‌
பிரம்மவலையில்‌ அகப்படாமல்‌ சுயம்பிரகாசமான பிரம்ம ஞானத்தினால்‌ “நிர்விகல்பச்‌ சமாதியிலிருப்பவர்கள்‌” அதாவது உயிருடன்‌ இருந்து கொண்டு அடக்கமடைவதைக்‌ குறிக்கும்‌ – இவ்வாறு இருப்பவர்களே சீவன்‌ முக்தர்கள்‌ ஆவார்கள்‌.

சுவாசம்‌ மூக்கின்‌ வழியாய்‌ இழுத்து நிறுத்தியபோது, வெகுநாட்களின்‌ பழக்கத்தால்‌ அந்தப்‌ பின்புறமாக மேலேறி தலையின்‌ உச்சிக்குப்‌ போய்‌ அவ்விடத்தில்‌ இருக்கும்‌ “நாபி” – என்னும்‌ தொப்புளுக்குச்‌ சென்று அங்குள்ள குண்டலி சத்தியைக்‌ கிளப்பிவிடும்‌. அப்போது நெற்றியில்‌ ஒளி காணப்படும்‌.

இவ்விரண்டையும்‌ முடித்த யோகி, சுவாசம்‌ அடக்கி அமைதியாக அமர்ந்திருந்தால்‌ அந்தச்‌ சுவாசம்‌ தேகமெல்லாம்‌ சுற்றித்‌ திரிந்து சரீரத்தில்‌ இருக்கும்‌ எழுபத்தி ஆறாயிரம்‌ நாடிகளையும்‌ கிளப்பி விடுவதால்‌ அவற்றுக்குக்‌ கோபமுண்டாகி “ஓம்‌” என்னும்‌ சப்தம்‌ சதா ரீங்காரம்‌ செய்து கொண்டிருக்கும்‌.

அப்போது அந்த ஓங்காரத்தில்‌ மனத்தை நாட்டிக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தால்‌ முன்‌ சொல்லியபடி பத்து நாத சத்தங்களையும்‌ கேட்கலாம்‌. நாத சப்தங்களை ஆனந்தமாய்க்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்‌ தறுவாயில்‌ சிரசிலிருந்து அமிர்தமானது “யோகாக்கினி” சுவாலையினால்‌ கரைந்து மண்டையிலிருந்து கண்டத்தின்‌ வழியாகச்‌ சொட்டுச்‌ சொட்டாய்‌ இருந்தாற்‌ போலிருந்து குபீரென்று தொண்டையில்‌ விழுந்து வயிற்றிற்குள்‌
செல்லும்‌. அமிர்தம்‌ மண்டையிலிருந்து வரும்‌ பொழுது நன்றாகத்‌ தெரியம்‌.

யோகியானவன்‌ மேற்‌ சொல்லிய நாதசப்தங்களைக்‌ கேட்டு அமிர்தபானம்‌ செய்து கொண்டிருந்து கடைசியில்‌ சூனியமாய்ப்‌ பிரம்மானந்தப்‌ பதவியை அடைவான்‌. யோகாப்‌
பியாசம்‌ செய்து சித்தியடைந்த மகான்களுக்கு நாபியிலிருந்து யோகா அக்கினி உண்டாகும்‌. இந்த யோகா அக்கினி, “சஞ்சிதம்‌” – என்னும்‌ புண்ணிய பாப இருவினைகளைச்‌ சாம்பலாய்‌ எரித்துவிடும்‌. அத்தோடு சூரியமண்டலம்‌,
சந்திரமண்டலம்‌, நட்சத்திரமண்டலம்‌ யாவும்‌ நம்மில்‌ அடங்கியிருக்கின்றது. சிரத்தை பக்தி, தியானத்தில்‌ இருப்பவர்களுக்குத்‌ தப்பாமல்‌ யோகம்‌ சித்திக்கும்‌.











வாசியை அடக்கி அடையும்‌ பலன்கள்‌ – சரவித்தை – 5

முன்‌ கூறியது போல்‌ யோகத்தைப்‌ பெற விரும்புபவர்கள்‌ சூரிய சந்திரகலைகளில்‌ பிராணவாயுவைச்‌ செலுத்தவேண்டும்‌. அப்போது பிருதிவி (மண்‌), அப்பு (நீர்), தேயு (அக்கினி), வாயு (காற்று) என்னும்‌ நான்கு தத்துவங்களும்‌ விலகும்‌. அப்போது
அப்பிராணவாயு தத்துவமாகிய வெட்டவெளியை அடையும்‌. அச்சமயம்‌ சுவாசம்‌ குறைந்து விடும்‌. அக்காலத்தில்‌ அமைதி (பந்தனம்‌) செய்யக்கூடும்‌.

அதாவது, பன்னிரண்டு அங்குல சுவாசத்தில்‌ ஓர்‌ அங்குல சுவாசம்‌ நிறுத்தி, பதினோர்‌ அங்குலம்‌ ஆடச்‌ செய்தால்‌ இவ்வுலக இச்சையானது நீங்கிவிடும்‌. இரண்டாம்‌ அங்குலம்‌ நிறுத்திப்பத்து அங்குலம்‌ ஆடச்செய்தால்‌, மனம்‌ ஆனந்ததத்திற்கு ஆட்பட்டு ஞானமும்‌, செல்வமும்‌ பெருக்கும்‌. மூன்றாம்‌ அங்குலம்‌ நிறுத்தி ஒன்பது அங்குலம்‌ ஆடச்‌ செய்தால்‌ விவேகியாவான்‌.

நான்கு அங்குலம்‌ நிறுத்தி எட்டு அங்குலம்‌ ஆடச்செய்தால்‌ தூர தேசத்தில்‌ நடக்கும்‌ விசேடங்களைச்‌ சொல்வான்‌. ஆறு அங்குலம்‌ ஆடச்‌ செய்தால்‌ ஆகாயத்தில்‌
நடக்கும்‌ அனைத்தையும்‌ அறிந்து கொள்வான்‌. ஏழு அங்குலம்‌ நிறுத்தி ஐந்து அங்குலம்‌ ஆடச்செய்தால்‌, சரீரம்‌ காயசித்தி அடையும்‌. எட்டு அங்குலம்‌ நிறுத்தி நான்கு அங்குலம்‌
ஆடச்செய்தால்‌, அணிமாதி சித்திகள்‌ அடைவான்‌.

ஒன்பது அங்குலம்‌ நிறுத்தி மூன்று அங்குலம்‌ ஆடச்செய்தால்‌, நவ கண்டங்களில்‌ சஞ்சரிப்பான்‌. பத்து அங்குலம்‌ நிறுத்தி இரண்டு அங்குலம்‌ ஆடச்செய்தால்‌, ஓர்‌ உடலை விட்டு மற்றொரு உடலுக்குள்‌ பிரவேசிப்பான்‌. பதினோர்‌ அங்குலம்‌ நிறுத்தி ஒரு அங்குலம்‌ ஆடச்செய்தால்‌, தனது ஆத்மாவில்‌ ஐக்கியமாவான்‌. பன்னிரண்டு அங்குலச்‌ சுவாசமும்‌ வெளியிடாமல்‌ நிறுத்தினால்‌ அந்தச்‌ சுவாசம்‌ உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கும்‌.

இப்படிப்பட்ட பரமயோகி இறப்பினை வென்று அன்னபானாங்கள்‌ இல்லாமல்‌ நீடுழிக்‌
காலம்‌ சமாதியில்‌ நின்று ஆனந்தமாக இருப்பான்‌. நல்ல இராச்சியமும்‌, தர்மமுடைய தேசமும்‌ என்று சொல்லக்‌ கூடிய கோயில்களில்‌ வசித்து, சத்திய நாடியைப்‌ பிராணயத்தில்‌ சொல்லியது போல்‌, பிரம்மத்தண்டின்‌ (முதுகெலும்பின்‌) மத்தியிலிருக்கும்‌. வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின்‌ வழியாகப்‌ பிராணவாயுவைப்‌ போகும்படிச்‌ செய்து பிரம்ம மந்திரத்தில்‌ நிறுத்தவேண்டும்‌.

அப்படி நிறுத்தினால்‌ பிராணனுடைய அசைவிற்கு அழிவு ஏற்படுகின்றபோது, மனம்‌ மிகவும்‌ சாந்தியடைகிறது. அப்போது ஆகாயம்‌ ஒன்றுமில்லாத இருப்பிடமாக இருக்கும்‌
என்று சொல்லப்பட்டிருக்கின்றது. பிராணவாயு, மனோவாயு இவ்விரண்டும்‌ வசமானபோது எண்ணங்களெல்லாம்‌ சமாதியில்‌ அடங்கிவிடும்‌. அப்போது மனம்‌ புத்தி, சித்தம்‌, அகங்காரம்‌ என்னும்‌ அந்தக்‌ கரணங்களுடன்‌ அழிந்துவிடுகின்றன.
இவையெல்லாம்‌ அழிந்தவுடன்‌ ஆத்மா அமைதியை அடைகின்றது. அப்போது உயிர்‌ சீவசொரூபியாக இருந்து முக்தியை அடைகின்றது. வாயு பிரம்ம மந்திரத்தில்‌ எப்போது
போகின்றதோ அப்பொழுது அல்லும்‌ பகலும்‌ நல்ல நிலையில்‌ இல்லாமல்‌ இருந்தால்‌ காலத்தை அனுசரித்துச்‌ செல்ல வேண்டும்‌.

எதுவரை தலையின்‌ உச்சிக்கு வாயு செல்கின்றதோ அதுவரையில்‌ யோகிகளுக்கு ஆயுள்‌ விருத்தியாகின்றது. தீர்க்கக்‌ காலம்‌ சமாதியை அடைந்து சித்தயோகி ஆகின்றான்‌.
பூர்வ மரணகாலத்தைத்‌ தெரிந்து கொண்டு தலை உச்சியில்‌ பிராணவாயுவை நிறுத்திக்‌ காலனை வெல்லுகின்றான்‌. தனக்குத்‌ தேவைப்படும்‌ போது பிராணனை விட்டு
விடுகின்றான்‌.

நமது சரிரத்திலுள்ள எழுபத்தாறாயிரம்‌ நாடிகளும்‌ வாயு பிரவேசிக்கும்‌ மார்க்கமுண்டு. அவற்றில்‌ சுழிமுனை என்னும்‌ மத்தியநாடி சாம்பவி சத்தியாகும்‌. மற்ற இடை, பிங்கலை, குஹ்‌ சரசுவதி, யசசுவினி, பூஷ, விசுவோதர, வர்ண, அஸ்தி, சிங்குவை, பயசுவினி, சங்குனி, காந்தாரி, அலம்புச என்னும்‌ பதினான்கு நாடிகள்‌ சிரேசுபட்டமானவை. அவற்றிலும்‌ சுழிமுனை, பிங்கலை, இடைகலை என்னும்‌ மூன்று நாடிகளும்‌
பிரதானமானவைகள்‌. இவற்றில்‌ சுழிமுனை நாடியே சிரேசம்‌ பட்டவையாகும்‌.

இதுவே பரமநாடி எனவும்‌ சொல்லப்படுகிறது. சுழிமுனை நாடிக்கு இடது பக்கத்திலிருப்பது இடைநாடி. இது இடதுநாடியில்‌ பரவியிருக்கும்‌. சுழிமுனை நாடிக்கு வலது பக்கத்திலிருப்பது பிங்கலைநாடி. இது வலது நாடியில்‌ பரவியிருக்கும்‌. நாடிகளில்‌
அரசயிலையில்‌ ஓடிக்‌ கொண்டிருக்கும்‌ நரம்புகளைப்‌ போல்‌ நமது சரீரத்தில்‌ கிளைகிளையாய்‌ ஓடிக்‌ கொண்டிருக்கின்றன. இந்நாடிகளின்‌ வழியாய்‌ வாயு யோக அப்பியாசத்தால்‌ கட்டப்பட்டிருக்கும்‌.

மனம்‌ எங்கெங்கு உண்டோ ? அங்கங்கு வாயுவும்‌ உண்டு. மனம்‌ எங்கெங்கு இல்லையோ அங்கங்கு வாயுவுமில்லை என்பது போல்‌ எந்த யோகியினால்‌ பிராண வாயு
கட்டப்‌ படுகின்றதோ யாரால்‌ மனம்‌ கட்டப்படுகின்றதோ அவனாலே பிராணன்‌ கட்டப்படுகின்றது. அமம்‌, பிராணன்‌ என்னும்‌ இவ்விரண்டும்‌ ஒன்றைக்‌ கட்டினால்‌ மற்றொன்றும்‌ தானாகக்‌ கட்டப்படுவது உறுதியாகும்‌. மனத்திற்குப்‌ பிராணசலனம்‌ வாசனை. அவற்றில்‌ ஒன்று நட்டமானாலும்‌, இரண்டாவதும்‌ உடனே நட்டமாகும்‌ என்பது உறுதியாகக்‌ கூறப்பட்டுள்ளது.

உலகில்‌ அனைத்துப்‌ பிறவிகளும்‌ சிரத்தை எனும்‌ பக்தியுடன்‌ செய்யக்‌ கூடிய பிராணயாம அப்பியாசத்தினால்‌ அநாதியாய்‌ வந்து கொண்டிருக்கும்‌ எல்லா வாசனைகளும்‌ நசித்து முக்தி பெறும்‌ மார்க்கத்தை உண்டாக்கும்‌. யோகநிலையில்‌ எண்ணம்‌ கொண்ட ஒருவன்‌ தினக்‌ கணக்குகளினாலும்‌, மாதக்கணக்குகளினாலும்‌ யோக சித்தியை அடைய வேண்டுமானால்‌ எண்ணம்‌ கொண்டால்‌ சித்தியாகும்‌.

தத்துவ ஞானமுடைய யோகி ஆத்மாவிற்கு எப்படிப்பட்ட செயல்களுக்கும்‌ புத்தியை ஒடும்படிச்‌ செய்யமாட்டான்‌. சர்வ காலத்திலும்‌ அதிக திருப்தி உடையவனாகவும்‌,
பரமாத்மாவிலேயே நிட்டை உடையவனாகவும்‌ இருப்பான்‌. அஞ்ஞானியாகிய மனிதர்கள்‌ மாயையால்‌ ஆட்பட்டுக்‌ கேவல சொரூபத்தில்‌ பிரகாசித்துப்‌ பரப்பிரம்மமே ஓழிய “பிரம்ம வேதம்‌’ என்று சொல்லமாட்டான்‌.

தத்துவ ஞானம்‌ உடைய யோகிகள்‌ பரமாத்மாவையும்‌, கிரக சேத்திராதிகளையும்‌, திரவியங்களையும்‌, புத்திரர்களையும்‌ கிரகிக்கின்றார்கள்‌. அன்னபானாங்கள்‌ முறையில்‌ வழிபடும்‌ ஞானிகள்‌ ஆதரிக்கும்‌ உத்தமர்கள்‌, ஞானிகளின்‌ புண்ணியத்தைப்‌ பெறுகின்றார்கள்‌. அவர்களைத்‌ தூடித்துப்‌ (தூடனம்‌ செய்து) அரிய செயல்களையும்‌ செய்பவர்கள்‌. அவர்களின்‌ பாபகர்மங்களைப்‌ பங்கிட்டுக்‌ கொள்கின்றார்கள்‌. பரம தத்துவ ஞான வசிட்டனுக்கு அநேகப்‌ பிறவிகளாக வந்து கொண்டிருக்கும்‌ குடும்பப்‌ பந்தத்தில்‌ ஈடுபடுவதனால்‌ காம, குரோதத்‌ தோசங்களும்‌, மோக லோபாதித்‌ தோசங்களும்‌
தினந்தினம்‌ சந்திப்பது பழக்கத்திற்குட்பட்டதாகிறது.

மனம்‌, கண்கள்‌ முதலாகிய உறுப்புகள்‌ ஒரு நிலையில்‌ நிறுத்துவதே சிரேட்டமான தியானநிலை என்று முனிவர்கள்‌ கூறுகின்றனர்‌. இந்தத்‌ தத்துவத்தில்‌ மரணம்‌ என்பதில்லை. மரணம்‌ வரும்வரையில்‌ வாசனை நம்மை விட்டுப்‌ போகாது. வாசனை நம்மைவிட்டுப்‌ போகும்‌ வரை சித்தம்‌ அணுகாது. சித்தம்‌ அணுகும்‌ வரையில்‌ தத்துவ ஞானத்தை அடைய முடியாது.

தத்துவ ஞானம்‌ உண்டாகும்‌ வரையில்‌ வாசனாசியம்‌ என்னும்‌ மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை என்ற மூன்று ஆசைகளும்‌ நம்மை விட்டு நீங்காது.
தத்துவ ஞானம்‌, மனோ நாசம்‌, வாசனாட்சயம்‌ என்னும்‌ இம்மூன்றும்‌ ஒன்றையொன்று காரணத்‌ தன்மையை அடைந்து சாதிப்பதற்கு எதுவரை சாதிக்க முடியுமோ அதுவரையில்‌
தத்துவ ஞானமும்‌ கைகூடும்‌.





ஏழு சக்கரங்களிலும்‌ சுவாசம்‌ நடந்து – சரவித்தை – 4

ஆயுள்‌ பாகம்‌ காட்டுதல்‌ நாம்‌ உள்ளுக்குள்‌ இழுக்கும்‌ சுவாசம்‌ நிசுவாசம்‌ என்றும்‌,
வெளியில்‌ விடும்‌ சுவாசம்‌ உசுவாசம்‌ என்றும்‌ கூறப்படுகிறது. இந்த நிசுவாசம்‌, உசுவாசங்கள்‌ குறைவுபடாமல்‌ இருந்தால்‌ சப்தாதி விசயங்களும்‌, சரீர வியாபாரங்களும்‌ எந்த விகாரத்திலும்‌ மனம்‌, புத்தி, சித்தம்‌ அகங்காரத்தின்‌ செயல்களும்‌ குறைவுபடாமல்‌ இருக்கும்‌. இதுவே ‘லயம்‌” எனப்படும்‌. இந்த லயமே யோகிகளுக்குப்‌ பயனடையும்‌ விதமாக அமையும்‌. இந்த நிசுவாச, உசுவாசங்களே “அம்ச” – என்பர்‌. இந்தச்‌ சுவாசமானது,
மூலாதாரம்‌, சுவாதிட்டானம்‌, மணிப்பூரகம்‌, அனாகதம்‌, விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம்‌ என்னும்‌ ஏழு சக்கரங்களிலும்‌ திரிந்து கொண்டு நம்முடைய ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டுகின்றது.

1. மூலாதாரத்திற்கும்‌ அதாவது, குதஸ்தானத்திற்கு அதிதேவதை கணபதி. அவருக்கு காலை 6 மணி முதல்‌ 6. 40 நிமிடங்கள்‌ வரையில்‌ 600 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌
அதற்கு வயது நிறைந்து சுவாதிட்டானத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

2. சுவாதிட்டானத்திற்கு அதாவது குய்ய ஸ்தானத்திற்கு அதிதேவதை பிரமன்‌. அவருக்குக்‌ காலை 6. 40 மணி முதல்‌ 1. 20 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌
அதற்கு வயது நிறைந்து மணிப்பூரக நாபியான தொப்புளுக்குள்‌ பிரவேசிக்கும்‌.

3. மணிப்பூரகத்திற்கு அதிதேவதை விஷ்ணு. அவருக்கு பகல்‌ 1. 20 மணி முதல்‌ இரவு 8 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து அனாகத்திற்குள்‌ அதாவது இருதயத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

4. அனாகதத்திற்கு அதிதேவதை ருத்திரன்‌. அவருக்கு இரவு 8 மணி முதல்‌ காலை 2. 40 மணி வரையில்‌ 6000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அடிநாக்குகான நெஞ்சுக்‌
குழிக்குள்‌ பிரவேசிக்கும்‌.

5. விசுத்திக்கு அதிதேவதை மகேசுவரன்‌. அவருக்கு காலை 2. 40 மணி முதல்‌ 3. 46 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து ஆக்ஞையுள்‌ அதாவது நெற்றிக்குள்‌ தோன்றும்‌.

6. ஆக்ஜஞைக்கு அதிதேவதை ஜீவன்‌. அவருக்குக்‌ காலை 3. 46 மணி முதல்‌ 4. 53 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து சகஸ்ராரம்‌
என்னும்‌ பிரம்ம கபாலத்திற்குள்‌ (தலை உச்சிக்குள்‌) பிரவேசிக்கும்‌.

7. சகஸ்ராரத்திற்கு அதிதேவதை பரமாத்மா. அவருக்குக்‌ காலை 4. 53 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ 1000 சுவாசங்கள்‌ நடக்கும்‌. நடந்தவுடன்‌ அதற்கு வயது நிறைந்து மறுபடியும்‌ மறுநாள்‌ காலை 6 மணிக்கு மூலாதாரத்திற்குள்‌ பிரவேசிக்கும்‌.

கடிகாரத்திற்குள்‌ இருக்கும்‌ முள்ளானது ஆடிக்‌ கொண்டே மணியைக்‌ காட்டுவது போல, இந்தச்‌ சுவாசமானது முன்‌ கூறிய ஏழு சக்கரங்களிலும்‌ மேற்காட்டிய கணக்கைப்‌
போல்‌ நிமிடத்திற்கு 15 சுவாசங்கள்‌ நடக்கும்‌. ஒரு மணிக்கு அறுபது நிமிடங்கள்‌ என்பதால்‌ அறுபதையும்‌ பதினைந்தையும்‌ பெருக்கினால்‌ தொள்ளாயிரம்‌ சுவாசங்கள்‌ நடந்து, நாள்‌ ஒன்றுக்கு 24 மணிநேரத்திற்குள்‌ அதாவது (900 ர 24 = 21, 600) இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து கொண்டு நம்முடைய ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டுகின்றது.

கடிகாரத்திற்கு மணிக்காட்டும்‌ தொழிலும்‌, சூரிய சந்திராதிகளுக்கு நாள்கள்‌, வாரங்கள்‌, மாதங்கள்‌, வருடங்கள்‌, யுகங்கள்‌ காட்டும்‌ தொழிலும்‌ உயிர்க்கோடிகளுக்கும்‌ சுவாசம்‌
ஆயுள்‌ பாகத்தைக்‌ காட்டும்‌ தொழிலாகின்றது.

இறந்திடும்‌ இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு பேரும்‌ பிரதிதினம்‌, நிமிடத்திற்கு 15 சுவாசங்களாய்‌ நடந்து நாள்‌ ஒன்றுக்கு இருபத்தி ஒராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து நடந்து இறக்கின்றனர்‌. கடவுளைக்‌ காண மூலவாசியை மேலே . ஏற்றிச்‌ சற்று நேரமும்‌ ஓய்வில்லாமல்‌ மூலாதாரத்தின்‌ வழியாக நடந்து கொண்டிருக்கும்‌ சுவாசத்தை முதுகெலும்பிலுள்ள வெள்ளை நரம்பின்‌ துவாரங்களின்‌ வழியாக மேலேயேற்றி
உயர்வாகவும்‌, தனக்குத்தானே பரமாகவுள்ள “சிதாகாசம்‌” என்னும்‌ வெளியைத்‌ தரிசிக்கவேண்டும்‌.

பிரதிதினம்‌ நிமிடத்திற்கு 15 சுவாசங்களாக நடந்து நாள்‌ ஒன்றுக்கு இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாசங்கள்‌ நடந்து நடந்து இவர்கள்‌ எல்லாரும்‌ மூக்குத்‌ துவாரங்களின்‌ வழியாய்‌ ஆடி ஒவ்வொருவராய்‌ இறந்து கொண்டே வந்து கடைசியில்‌ இத்தேகத்தை விட்டு நீங்கினால்‌ கடவுளைக்‌ காண நம்முடைய ஆயுள்‌ பாகம்‌ இந்தச்‌ சுவாசமே ஒழிய சூரிய சந்திரர்கள்‌ நடக்கும்‌ நாட்களல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இத்தனைக்‌ கோடி
சுவாசங்கள்‌ என்று பிறப்பின்‌ காலத்திலேயே பஞ்ச பூதங்களினால்‌ உண்டான சரீரத்தில்‌ சேர்க்கப்‌ பட்டிருக்கின்றன. இப்பேர்ப்பட்ட மகா ரகசியமாகிய சுவாசத்தைத்‌ தெரிந்து
கொள்ளாமல்‌ மனிதர்கள்‌ சாதாரணமாகப்‌ பேசும்பொழுது 12 அங்குலம்‌ சுவாசம்‌ வெளி வந்து 8 அங்குல சுவாசம்‌ உள்சென்று 4 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

நடக்கும்‌ போது 16 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 8 அங்குல சுவாசம்‌ உள்சென்று 8 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

கைத்தொழில்‌ செய்யும்‌ போது 20 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 10 அங்குல சுவாசம்‌ உள்சென்று 10 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

சண்டையில்‌ 24 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 12 அங்குல சுவாசம்‌ உள்சென்று 12 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

நித்திரையில்‌ 48 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 30 அங்குல சுவாசம்‌ உள்சென்று 18 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

ஒடும் பொழுது 54 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 27 அங்குல சுவாசம்‌ உள்சென்று 27 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

சம்போகக்‌ காலத்தில்‌ 64 அங்குலம்‌ சுவாசம்‌ வெளிவந்து 24 அங்குலசுவாசம்‌ உள்சென்று 40 அங்குலசுவாசம்‌ வெளியில்‌ நட்டமாகப்‌ போகிறது.

இவ்விதமாக ஒவ்வொருவரும்‌ நாள்‌ ஒன்றுக்கு 30, 40 ஆயிரக்கணக்கான சுவாசத்தைச்‌ செலவழித்து விட்டு 60, 70, வருடத்திற்குள்‌ மரணமடைகின்றார்கள்‌. சகல பிறப்பு
உயிரினங்களும்‌ நாள்‌ ஒன்றுக்கு 21,600 சுவாசங்கள்‌ கணக்குக்கு இப்படியாக வைக்கப்பட்டிருக்கின்றது.

மனிதர்களுக்கு கடவுளால்‌ கொடுக்கப்பட்ட வயது நூறாக இருந்த போதிலும்‌, மேலே கூறப்பட்டது போல்‌ சுவாசத்தை மனிதர்கள்‌ விசேடங்களாகச்‌ செலவழித்து விடுவதால்‌ 80
வயதிற்கு மேல்‌ உயிருடன்‌ இருக்கமாட்டார்கள்‌.

குழந்தையானது பிறந்த மூன்றாம்‌ மாதம்‌ இறந்து விட்டால்‌ அக்குழந்தைக்கு 19, 44, 000 பத்தொன்பது இலட்சத்து நாலாயிரம்‌ சுவாசமே இருப்பதால்‌ அவை செலவழிந்தவுடன்‌
உயிர்‌ போய்விட்டது என்று அறியலாம்‌.

ஒவ்வொரு சீவராசிகளும்‌ எந்நாள்‌ வரையில்‌ பிழைத்திருக்க வேண்டுமோ அந்நாட்களுக்கு வேண்டிய சுவாசத்தைக்‌ கடவுள்‌ கணக்கெடுத்து அதற்குத்‌ தக்கவாறு சுவாசத்தை ஏற்படுத்திச்‌ சீவன்களைப்‌ பிறக்கச்‌ செய்து அனுப்பிவிடுகின்றான்‌.

இந்தச்‌ சீவன்களைப்‌ பரிட்சை செய்வதற்காகவே கடவுள்‌ ஆயிரம்‌ வருடங்களுக்கு வேண்டிய சுவாசத்தைச்‌ சீவராசிகளுக்குக்‌ கொடுத்துப்‌ பிழைத்திருக்க அனுப்பிய போதிலும்‌ இவர்கள்‌ ஒவ்வொரு தினமும்‌ ஒரு நிமிடமாவது ஓய்வில்லாமல்‌ ஆயிரம்‌ வருடங்கள்‌ வரையிலும்‌ மாயை சம்சார வாழ்க்கையில்‌ வேண்டிய வேலைகளை மட்டும்‌
செய்து கொண்டு வருகிறார்கள்‌. ஆனால்‌ மோட்சம்‌ அடைவதற்கான மார்க்கத்தை அடைய அரை நிமிடமே கடவுளை நினைத்து வணங்குகிறார்கள்‌.

ஆனால்‌ இவர்கள்‌ கடவுளிடம்‌ எதை நினைத்து வேண்டுகிறார்கள்‌ என்றால்‌ நான்‌ செய்யும்‌ வியாபாரத்தில்‌ நல்ல இலாபம்‌ வரவேண்டுமென்றோ, என்‌ வழக்கில்‌ வெற்றியடைய
வேண்டும்‌ என்றோ, நான்‌ கொடுத்த பணம்‌ வட்டி முதலுடன்‌ சரியாக வர வேண்டும்‌ என்றோ, எனக்கு நல்ல சம்பவங்கள்‌ நடைபெற வேண்டும்‌ என்றோ, வாரிசுகள்‌ பிறக்க வேண்டும்‌ என்றோ, என்‌ குடும்பத்திலுள்ளவர்களுக்கு யாதொரு வியாதியும்‌ அணுகாமல்‌ இருக்க வேண்டும்‌ என்றோ இவ்வாறு அவரவருக்கு வேண்டியபடி வரங்களைக்‌ கேட்கிறார்கள்‌.

ஆனால்‌ மாயை சம்சாரத்தைக்‌ கடந்து கடைத்தேறும்‌ படியான வரத்தைக்‌ கேட்கமாட்டார்கள்‌. சம்சாரத்திலிருந்து கடைத்தேற வேண்டுமென்று கடவுளைக்‌ கேட்பவர்கள்‌ நூற்றில்‌ ஒருவர்‌ இருப்பது கூட மிகவும்‌ அரிதாக இருக்கின்றது.

இப்படிப்பட்டவர்களின்‌ கூத்துகள்‌ யாவும்‌ கடவுளுக்கு ஒரு வேடிக்கையாதலால்‌ மனிதர்களுக்குள்‌ மாயமான மக்களுக்கு விசேடமான ஆசைகளை உண்டாக்கி அந்த
ஆசையால்‌ அவர்களை மோகவலையில்‌ ஆட்படுத்துகின்றார்‌. தான்‌ எல்லாருடைய பலவிதமான கூத்துகளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கின்றான்‌.

இவற்றை எல்லாம்‌ பெண்களும்‌, ஆண்களும்‌ புரிந்து கொண்டு நாம்‌ தினந்தோறும்‌ என்ன கடமைகளைச்‌ செய்கின்றோம்‌ ? என யோசித்துச்‌ செயல்பட வேண்டும்‌. பின்‌ இதற்காகவா பிறப்பெடுத்தோம்‌? என ஆழ்ந்த மனத்தில்‌ யாரொருவன்‌ யோசிக்கின்றானோ அப்படிப்‌ பட்டவனைக்‌ கடவுள்‌ கருணை கொண்டு நினைக்கின்றான்‌.

நமதுகாலம்‌ இதுவரை எதுவுமில்லாமல்‌ போய்விட்டன என நினைத்து அவனது மனம்‌ துடிதுடித்து மறுபடியும்‌ தாயின்‌ கர்ப்பத்தில்‌ உதிக்காமல்‌ இருப்பதற்காக என்ன செய்ய
வேண்டுமோ? அதற்கு உரியனவற்றைச்‌ செய்யத்‌ தொடங்குவான்‌. ஆதலால்‌ நாம்‌ உலகத்தில்‌ .ஏன்‌ பிறந்தோம்‌, பிறந்ததற்காக எதனை. அடைய வேண்டும்‌ – என்று
பெண்களும்‌, ஆண்களும்‌ யோசிப்பார்களே ஆனால்‌ அவர்களுக்கு நல்ல அறிவு உண்டாகி மறுபிறப்பு வராதபடி அதற்கு வேண்டிய வழியைத்‌ தேடிக்‌ கொள்வார்கள்‌. இதனை
ஆலோசித்து உண்மைப்பொருளை உணர்ந்து அதுவாகவே மனத்திற்குப்‌ புலப்படும்‌.















    ஜீரண சக்தி ஆயுள்‌ விருத்தி – சரவித்தை – 3

    நீங்கள்‌ இரவிலும்‌, பகலிலும்‌, சாப்பிட்டு முடித்துப்‌ படுக்கும் போதும்‌, சாப்பிடாமல்‌ படுக்கும்‌ போதும்‌ இடது கைப்‌ புறமாக வைத்துப்‌ படுக்கவேண்டும்‌. ஏனென்றால்‌ நமது உணவுப்‌ பையானது வயிற்றின்‌ இடதுபுறத்தில்‌ இருப்பதால்‌ இடது பக்கம்‌ சாய்ந்து படுக்க வேண்டும்‌. அவ்வாறு படுப்பதனால்‌ சாப்பிட்ட ஆகாரமெல்லாம்‌ சரியாகச்‌ செரிமானமாகி வயிற்றுக்கு யாதொரு சங்கடமில்லாமல்‌ இருப்பதோடு சுவாசமும்‌ வலது நாசியில்‌ ஓடிக் கொண்டிருக்கும்‌. அதனால்‌ ஆயுள்‌ விருத்தியாகும்‌.

    இதற்குக்‌ காரணம்‌ என்னவெனில்‌ வலது நாசியில்‌ இருக்கும்‌ சுவாசம்‌ 8 அங்குலமும்‌, இடதுநாசியில்‌ வரும்‌ சுவாசம்‌ 12 அங்குலமும்‌ வெளியில்‌ வரும்‌. வலதுநாசியில்‌ 8 அங்குல சுவாசம்‌ வெளியில்‌ வருவதால்‌ ஒவ்வொரு சுவாசத்திலும்‌ 4 அங்குலச்‌ சுவாசம்‌ கூடி வருகின்றது. அதனால்‌ ஆயுள்‌ விருத்தி அடைகிறது. இடதுபக்கம்‌ சாய்ந்து படுப்பதால்‌ சீரண சக்தியும்‌, ஆயுள்‌ விருத்தியும்‌ உண்டாகிறது. சாப்பிட்டவுடன்‌ வலது பக்கமாகக்‌ கைவைத்துச்‌ சாய்ந்து படுப்பதால்‌ இரைப்பை வலதுகை ஓரமாய்ப்‌ புரளும்‌. அப்படிப்‌ புரளுவதால்‌ சாப்பிட்ட ஆகாரம்‌ சீரணமாகாமல்‌ உடலுக்குக்‌ கெடுதியை உண்டாக்கும்‌.

    அத்துடன்‌ சுவாசம்‌ 12 அங்குலம்‌ நீளம்‌ வெளியில்‌ இடது நாசியில்‌ ஓடும்‌. அதனால்‌ நீண்ட ஆயுளுக்கும்‌ வாய்ப்புண்டு. சாப்பிட்டவுடன்‌ வலது கையை அழுந்த ஒரு பக்கமாகப்‌
    படுக்கும்போது இவ்விரண்டு விதமான துன்பங்களும்‌ ஏற்படும்‌. இதனை ஒவ்வொரு மங்கையரும்‌ அறிந்து கணவர்மார்‌களுக்கும்‌, குழந்தைகளுக்கும்‌ முக்கியமாகக்‌ கவனிக்க
    வேண்டிய விவரமாகும்‌.

    சுவாசத்தை நாசிகளில்‌ மாற்றும்‌ முறை – சரவித்தை – 2

    இடது நாசியிலிருக்கும்‌ சுவாசத்தை வலது நாசியில்‌ மாற்ற வேண்டுமானால்‌ இடது காலின்‌ பேரில்‌ வலது காலைச்‌ சமமாக வைத்து உட்கார்ந்து கொண்டு, இடது கையைப்‌ பூமியில்‌ ஊன்றி வலது கால்‌ பெரு நரம்பைக்‌ கணுக்காலிடம்‌ வலது கை நடு விரலால்‌ அசைத்துக்‌ கொண்டே இருக்கவேண்டும்‌.

    சூரிய நாடியில்‌ அதாவது, வலது நாசியில்‌ மாறி விடும்‌. வலது நாசியில்‌ இருக்கும்‌ சுவாசத்தை இடது நாசிக்கு மாற்ற வேண்டுமானால்‌ மேலே கூறியதுபோல்‌ வலதுகாலின்‌ மேல்‌ இடது காலைச்‌ சமமாக வைத்து வலது கையைப்‌ பூமியில்‌ ஊன்றி இடது கை நடு விரலால்‌ இடது கால்‌ பெரு விரல்‌ பெரு நரம்பைக்‌ கணுக்காலிடம்‌ முன்‌ அசைத்ததுபோல்‌ அசைத்துக்‌ கொண்டே இருந்தால்‌ சந்திர நாடியில்‌ அதாவது இடது நாசியில்‌ மாறும்‌.

    இவ்விரண்டும்‌ மாறுமிடம்‌ புருவ மத்தியாகிய நெற்றியில்‌ தாமரைக்‌ கொடியிலுள்ள நூலைப்‌ போன்ற மிகவும்‌ “தந்திரங்கள்‌” உண்டு. அதுதான்‌ சந்திரநாடி, சூரியநாடி, சுழிமுனை நாடிகள்‌ மூன்றும்‌ கலக்குமிடமாகும்‌. அவ்விடம்தான்‌ சச்சிதானந்தம்‌
    என்ற உண்மை அறிவுடன்‌ இருக்கும்‌ ஆனந்தமிடமாகும்‌. மேலும்‌, உட்கார்ந்து, யோக தண்டமாகிலும்‌ அல்லது தனக்குத்‌ தகுந்த உயரமுள்ள மனையாகிலும்‌ வலது அக்குளில்‌
    வைத்துக்‌ கொண்டு அக்குளின்‌ நரம்பு ஊன்றும்படி அழுத்தினால்‌ சில நிமிடங்களில்‌ வலது நாசியிலிருக்கும்‌ சுவாசம்‌ இடது நாசிக்கு மாறும்‌. அல்லது அக்குளுக்கும்‌, முழங்கைக்கும்‌ மத்தியிலும்‌ வைத்து நரம்பை ஊன்றினாலும்‌ மாறும்‌. சுவாசம்‌ எப்பொழுதும்‌ சூரிய நாடியில்‌ இருப்பதற்காகவே யோகிகள்‌ எப்பொழுதும்‌ யோக தண்டத்தை தமக்கு இடது அக்குளில்‌ வைத்திருக்கிறார்கள்‌.

    சுவாசத்திற்கு வாசி என்றும்‌ பெயருண்டு. இந்த வாசியை மாற்றுவதனால்‌ அந்த யோக தண்டத்திற்கு “வாசிக்கோல்‌” – என்றும்‌ பெயர்‌ வந்தது. சாதாரணமாய்‌ உட்கார்ந்திருக்கும் போதும்‌, சந்திர நாடியில்‌ இருக்கும் போதும்‌ சந்திர நாடியில்‌ இருக்கும்‌ சுவாசத்தைச்‌ சூரிய நாடியில்‌ மாற்ற வேண்டுமானால்‌ இடது கையைப்‌ பூமியிலூன்றி இடது பக்க முதுகை மட்டும்‌ சுவரில்‌ சாய்த்துக்‌ கொண்டிருந்தால்‌ சந்திர நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சூரிய நாடிக்கு மாறும்‌. சூரிய நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சந்திர நாடிக்கு மாற்ற வேண்டுமானால்‌
    வலது கையைப்‌ பூமியிலூன்றி வலது பக்க முதுகை மட்டும்‌ சுவரில்‌ சாய்த்துக்‌ கொண்டிருந்தால்‌ சூரிய நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சந்திரநாடிக்கு மாறும்‌.

    படுக்கையில்‌ சூரியநாடியிலிருக்கும்‌ சுவாசத்தைச்‌ சந்திரநாடிக்கு மாற்றவேண்டுமானால்‌ வலதுபக்கத்தில்‌ ஓரே பக்கமாகப்‌ படுத்து வலதுகையைத்‌ தலைக்குக்‌ கீழ்வைத்துக்‌
    கொண்டிருந்தால்‌ சுவாசம்‌ சூரிய நாடியிலிருந்து சந்திர நாடிக்கு மாறும்‌. சந்திர நாடியிலிருக்கும்‌ சுவாசத்தைச்‌ சூரியநாடிக்கு மாற்றவேண்டுமானால்‌ இடதுபக்கத்தில்‌ ஒரே பக்கமாகப்‌ படுத்து இடதுகையைத்‌ தலைக்குக்‌ கீழ்வைத்துக்‌ கொண்டிருந்தால்‌ சுவாசம்‌ சந்திரநாடியிலிருந்து சூரியநாடிக்கு மாறும்‌.

    வழியில்‌ நடக்கும்போது குடை, துண்டு இவற்றில்‌ எதுவாயினும்‌ பந்தாகச்‌ சுற்றி இடது அக்குளில்‌ வைத்துக்‌ கொண்டு சென்றால்‌ சுவாசமானது சூரிய நாடியிலேயே இருக்கும்‌. சந்திர நாடியில்‌ இருக்க வேண்டுமானால்‌ மேலே கூறியதுபோல்‌ குடை, துண்டு இவற்றில்‌ ஏதுவாயினும்‌ பந்தாகச்‌ சுற்றி வலது அக்குளில்‌ வைத்துக்‌ கொண்டு சென்றால்‌ சுவாசமானது சந்திர நாடியிலேயே இருக்கும்‌. இந்த மகா இரகசியங்களை முன்‌ சொல்லியதுபோல்‌ சிலகாலம்‌ செய்து வந்தால்‌ நிமிடத்திற்கு இரண்டு மூன்று முறை சுவாசத்தை அந்தந்த இராசிக்கு மாற்றலாம்‌.

    முன்‌ சொல்லியதுபோல்‌ அந்தந்த நாட்களில்‌ காலை 4 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ சுவாசம்‌ மாற்றிக்‌ கொண்டே இருக்கவேண்டும்‌. இதில்‌ சொல்லிய சுவாசத்தைக்‌ கடைப்‌
    பிடிப்பவர்கள்‌ எவ்வித ஆபத்துக்களுக்கும்‌ இடமில்லாமல்‌ எப்போதும்‌ ஆனந்தமாக இருப்பார்கள்‌. சுவாசமானது சர்வ உயிர்களின்‌ தேக மத்தியில்‌ பிராணவாயுவிலிருந்து அனுபவப்‌ பூர்வமாக அதாவது, உசுவாச நிசுவாசங்களாய்‌ ஊர்த்துவ முகமாகத்‌ தலை கீழாய்‌ நாபியிலிருந்து புறப்பட்டு மூக்கின்‌ ரந்திரங்களின்‌ வழியாக மேலும்‌ கீழும்‌, கீழும்‌ மேலுமாக ஆடிக்‌ கொண்டிருக்கும்‌. அபானவாயு பூரக வடிவமாகவும்‌, அதோமுகமாகவும்‌ (கீழ்ப்புறமாக) திரிந்து கொண்டிருக்கும்‌. இவ்விரண்டிற்கும்‌ மத்தியில்‌ இருப்பதே ஆத்மாவாகும்‌.

    பிரதிமாதம்‌ அமாவாசை, பிரதமை, துவிதியை இந்நாட்களில்‌ இரவும்‌ பகலும்‌ சூரியநாடியில்‌ செலுத்தினால்‌ அம்மாதமெல்லாம்‌ நன்மையைத்‌ தரும்‌. பிரதிவருடம்‌
    சித்திரைமாதம்‌ அமாவாசை, பிரதமை, துவிதியை இம்மூன்று நாட்களிலும்‌ மேலே கூறியதுபோல்‌ சுவாசத்தைச்‌, சூரியநாடியில்‌ செலுத்தினால்‌ அவ்வருடம்‌ முழுவதும்‌ சுகத்தைத்‌ தரும்‌. இவற்றை அனுபவத்தால்‌ காணமுடியும்‌.



      © 2020 Spirituality